ஆப்நகரம்

TNPL Final 2019: இரண்டாவது முறையாக கோப்பை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!

சென்னை: தமிழ் நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.,) ஃபைனலில் திண்டுக்கல் அணியை வீழ்த்திய சேப்பாக் கில்லீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

Samayam Tamil 16 Aug 2019, 1:23 pm
இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல்., தொடரைப்போல, தமிழகத்தில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் ஃபைனல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது.
Samayam Tamil TNPL


இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி , திண்டுக்கல் அணியை எதிர்கொண்டது. இதில் ‘டாஸ்’ வென்ற சேப்பாக் அணி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தது. சேப்பாக் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது.


எட்டக்கூடிய இலக்கை துரத்திய திண்டுக்கல் அணி பேட்ஸ்மேன்கள், அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறினர். பின் வரிசை வீரர்களும் சொதப்ப, திண்டுக்கல் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 114 ரன்கள் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் டிஎன்பிஎல் தொடரில் சேப்பாக் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. முன்னதாக கடந்த 2017ல் சேப்பாக் அணி, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்