ஆப்நகரம்

கிரிக்கெட் வீரர் அஸ்வின் அரசியல் பிரவேசம்: இளைஞர்களுக்கு அழைப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது அரசியல் பிரவேசத்தை ட்விட்டரில் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

TNN 6 Feb 2017, 1:35 pm
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது அரசியல் பிரவேசத்தை ட்விட்டரில் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil to all the youngsters in tn 234 job opportunities to open up shortly r ashwin aims political appearance
கிரிக்கெட் வீரர் அஸ்வின் அரசியல் பிரவேசம்: இளைஞர்களுக்கு அழைப்பு


இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தனது அரசியல் பிரவேசம் பற்றி சூசகமாகத் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்ட அவர், “தமிழக இளைஞர்கள் அனைவருடைய கவனத்திற்கு, விரைவில் 234 வேலை வாய்ப்புகள் உருவாக உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்திற்கு கூடிய விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரக்கூடும் என்றும் அப்போது 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற உறுப்பினர் பணிக்கான வாய்ப்பு உருவாகும் என்பதையும் அஸ்வின் மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார்.


இதனைப் பார்த்த நெட்டிசன்கள், அப்படியென்றால் அஸ்வின் அரசியலில் குதிக்கப்போகிறாரா என்றும் கட்சி தொடங்குவாரா அல்லது எந்த கட்சியிலாவது இணைவாரா என்று யோசிக்கத் தொடங்கினர். உடனே, “தான் கூறியதில் அரசியல் ஏதும் இல்லை. எப்படி எல்லாம் ட்விட்ஸ் செய்கிறார்கள்” என்று பல்டி அடித்துவிட்டார் அஸ்வின்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்