ஆப்நகரம்

அறிமுக டி20 போட்டியில்…ஆட்ட நாயகன் வென்ற டாப் 3 இந்திய வீரர்கள்: தமிழக வீரருக்கும் இடம்!

டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுக போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற 3 இந்திய வீரர்கள்.

Samayam Tamil 21 Nov 2021, 11:13 am
டி20 கிரிக்கெட்டில் ஆட்ட நாயகன் விருது வெல்வது பலரின் கனவாக இருக்கும். ஆனால், அதனை சுலபமாக வெல்ல முடியாது. 50 ரன்கள் அடித்த வீரருக்கு கூட சில சமயம் ஆட்ட நாயகன் விருது கிடைக்காது. ஏன்…13 வருடங்களாக விளையாடிய இந்திய அணி முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி கூட, ஒருமுறைகூட ஆட்ட நாயகன் விருதை வென்றது கிடையாது. அப்படி விலைமதிப்பற்ற அந்த ஆட்ட நாயகன் விருதை சில வீரர்கள் முதல் போட்டியிலேயே வென்று சாதித்திருக்கிறார்கள். அவர்களில் டாப் 3 இந்திய வீரர்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
Samayam Tamil top 3 indian players who got player of the match award in first t20 game
அறிமுக டி20 போட்டியில்…ஆட்ட நாயகன் வென்ற டாப் 3 இந்திய வீரர்கள்: தமிழக வீரருக்கும் இடம்!


தினேஷ் கார்த்திக்:

2006ஆம் ஆண்டில் இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகள் டி20 போட்டியில் விளையாடியபோது, தினேஷ் கார்த்திக் அறிமுக வீரராக களமிறங்கினார். அப்போது, தென்னாப்பிரிக்க அடித்த 126 ரன்கள் துரத்திய இந்திய அணியில் விரேந்தர் சேவாக் 34 (29), தினேஷ் மோங்கியா ஆகியோர் 38 (45) சிறப்பாக விளையாடி ஆட்டமிழந்தனர். இறுதிக்கட்டத்தில் தினேஷ் கார்த்திக் 28 பந்துகளில் 31 ரன்கள் அடித்து, 19.5ஆவது ஓவரில் அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். இதனால், முதல் போட்டியிலேயே அவருக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.

நவ்தீப் சைனி:

2019ஆம் ஆண்டில் இந்தியா, மேற்கியந்தியத் தீவுகள் இடையிலான டி20 போட்டி பெங்களூரில் நடைபெற்றது. இப்போட்டியில் அறிமுக வீரராக பங்கேற்ற வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி, 3 விக்கெட்களை கைப்பற்றி 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால், இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. இந்திய அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த அறிமுக வீரர் நவ்தீப் சைனிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

ஹர்ஷல் படேல்:

ஐபிஎல் 14ஆவது சீசனில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய ஹர்ஷல் படேலுக்கு, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இடம் கிடைத்தது. முதல் போட்டியில் களமிறங்க முடியவில்லை. இரண்டாவது போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. இதில் மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்களை கைப்பற்றி, 25 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்தார். இதனால், 200 ரன்களை தொடும் என கணிக்கப்பட்டிருந்த நியூசிலாந்து அணி 150+ ரன்கள் மட்டுமே அடித்தது. இறுதியில் இந்தியா 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஹர்ஷல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்