ஆப்நகரம்

ஓய்வுக்கு முன்…கடைசி போட்டியில் அதிக ரன்கள் குவித்த டாப் 5 இந்திய வீரர்கள்!

ஓய்வு பெறுவதற்கு முன்பு கடைசி போட்டியில் குவித்த 5 இந்திய வீரர்கள் குறித்த தொகுப்பு.

Samayam Tamil 9 Oct 2021, 6:21 pm
கிரிக்கெட் வீரர் ஒருவர் தனது கடைசி போட்டியில் விளையாடும்போது, அது நிச்சயம் பெரிய அளவில் கவனம் பெறும். அவர் எப்படி விளையாடப் போகிறார், ரன்களை குவிப்பாரா? என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அப்படி தங்களின் கடைசிப் போட்டியில் பெரிய ஸ்கோர் அடித்தவர்கள் வெகு சிலரே. அவர்களில் டாப் 5 இந்திய வீரர்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
Samayam Tamil top 5 indian players who scored more runs in last match
ஓய்வுக்கு முன்…கடைசி போட்டியில் அதிக ரன்கள் குவித்த டாப் 5 இந்திய வீரர்கள்!



5.சுரீந்தர் அமர்நாத் – 62 (75)

இந்திய அணியின் முன்னாள் வீரர் அமர்நாத்தின் மகன்தான் சுரீந்தர் அமர்நாத். தனது 15 வயதிலேயே ரஞ்சிக் கோப்பையில் விளையாட ஆரம்பித்த அவர், தனது முதல் சர்வதேச டெஸ்டில் நியூசிலாந்துக்கு எதிராக சதம் விளாசி அசத்தினார். இதுவரை 10 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், தனது கடைசிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 75 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார்.

4.ராகுல் திராவிட் – 69 (79)

இந்திய அணியின் தடுப்புச்சுவர் ராகுல் திராவிட், பலமுறை சிறப்பாக செயல்பட்டு மேட்ச் வின்னராக இருந்திருக்கிறார். இவர் 2011ஆம் ஆண்டில் தனது கடைசி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியபோது 79 பந்துகளில் 69 ரன்கள் விளாசி, விடைபெற்றார்.

3.சையத் அபித் அலி – 70 (98)

இந்திய அணியின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக திகழ்ந்தவர் சையத் அபித் அலி. மிகச்சிறந்த பௌலர், லோயர் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்தார். பீல்டிங்கிலும் பட்டயை கிளப்பி மிரட்டி வந்தார். இவர் தனது முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கி 6 விக்கெட்களை கைப்பற்றி கெத்துகாட்டினார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்த இவர் 1975ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக 70 ரன்கள் மற்றும் 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதுதான் அவரது கடைசி போட்டியாக அமைந்தது.

2.ககன் கோடா – 82 (129)

இந்திய அணியின் மிகச்சிறப்பான ஓபனராக திகழ வேண்டிய ககன் கோடா, சரியான வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால், அதிக போட்டிகளில் விளையாடவில்லை. ரஞ்சிக் கோப்பையில் அறிமுக போட்டியிலேயே சதம் விளாசியவர். மொத்தம் 2 ஒருநாள் போட்டிகளில் மட்டும் பங்கேற்ற இவர், கடைசி போட்டியில் 82 (129) குவித்து அசத்தினார்.

1.அஜய் ஜடேஜா – 93 (103)

இந்திய அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் அஜய் ஜடேஜா. பலமுறை சிறப்பாக செயல்பட்டு மேட்ச் வின்னராக இருந்திருக்கிறார். தொடர்ந்து பல போட்டிகளில் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சூதாட்ட புகாரில் சிக்கியதால், அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. கடைசி போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 93 (103) குவித்து அசத்தினார். இதனால், இந்தியா மோசமான தோல்வியில் இருந்து தப்பித்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்