ஆப்நகரம்

‘அவனுங்க’…உண்மையான இந்தியர்களே கிடையாதுங்க: மதிக்க தகுதி இல்லாதவங்க: முகமது ஷமி காட்டம்!

விமர்சித்தவர்களுக்கு முகமது ஷமி காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

Samayam Tamil 2 Mar 2022, 7:34 am
டி20 உலகக் கோப்பை 2021 தொடர் கடந்த ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்தி அணி, படுமோசமாக சொதப்பி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்றது.
Samayam Tamil முகமது ஷமி


இந்த தோல்விக்கு இந்திய அணியில் விளையாடிய அனைவரும்தான் முக்கிய காரணம். ஒருவர் கூட சிறப்பாக செயல்படவில்லை. ஆனால், சில திடீர் கிரிக்கெட் ரசிகர்கள், விமர்சகர்கள், தோல்விக்கு முகமது ஷமிதான் காரணம் எனக் கூறி மதத்தை அடிப்படையாக வைத்து கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இப்படி மதத்தை வைத்து விமர்சனம் செய்து முட்டாள் தனமாக விஷயம் என முன்னாள் வீரர்கள், சக வீரர்கள் ஷமிக்கு ஆதரவாக குரல் எழுப்ப துவங்கினார்கள். இதனால், திடீர் கிரிக்கெட் விமர்சகர்கள் காணாமல் போனார்கள்.

ஷமி பேட்டி:

இப்பிரச்சினை குறித்து முகமது ஷமியும் வாய் திறக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில், நீண்ட காலத்திற்கு பிறகு முகமது ஷமி மனம் திறந்து பேசியுள்ளார். அதில், “மதவெறிக்கு மருந்து என்பது கிடையாது. இன்னும் சொல்லப்போனால், அப்படி விமர்சித்தவர்கள் உண்மையான கிரிக்கெட் ரசிகர்களே கிடையாது. இன்னும் ஒருபடி மேலே போய் சொன்னால், அவர்கள் இந்தியர்களே கிடையாது” என கடுமையாக சாடினார்.

மேலும், “ஒருவரை, இப்படி கீழ்த்தரமாக விமர்சித்தால், அவர்களுக்கு படிப்பறிவு குறைவு எனக் கருதி கடந்து சென்றுவிட வேண்டும். உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள் அப்போட்டியில் சிறப்பாக விளையாடாததை நினைத்து கவலைப்பட்டிருப்பார்கள். நானும்தான். எந்நேரமும் 100% சதவீதம் சிறப்பாக செயல்பட முடியாது. இப்படிப்பட்ட விமர்சனங்களை நினைத்து கவலைப்பட தேவையில்லை. இது எல்லாம் எனது திறமையை பாதிக்காது” எனக் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்