ஆப்நகரம்

ஐபிஎல்: இரண்டு புதிய அணிகள் சேர்ப்பு!

ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் இணைக்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

Samayam Tamil 24 Dec 2020, 4:52 pm
அகமதாபாத்தில் இன்று நடந்த பிசிசிஐ ஆண்டு பொதுக் கூட்டத்தில் ஐபிஎல் தொடரில் மேலும் இரண்டு அணிகள் சேர்க்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டிலிருந்து மட்டுமே இந்த இரு அணிகளும் களமிறங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த அணிகள் இணைப்பு குறித்து சில நாட்களுக்கு முன்பு பேசிய பிசிசிஐ நிர்வாகி ஒருவர், “மேலும் இரண்டு அணிகளை இணைப்பது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம். பெரும்பாலான, அணி உரிமையாளர்கள் ஐபிஎல் தொடரை வருகிற ஏப்ரல் மாதத்தில் நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Samayam Tamil ipl


இதனால், இடைப்பட்ட மாதங்களில் மெகா ஏலம் நடத்த முடியாத நிலை உள்ளது. மெகா ஏலம் சாத்தியமில்லை என்றால் புது அணிகளை இணைப்பதும் சாத்தியமில்லை. இதனால், புது அணிகள் 2022ஆம் ஆண்டு முதல் மட்டுமே களமிறங்க வாய்ப்புள்ளது. மெகா ஏலத்தில் அணியை வாங்கும் உரிமையாளர்களுக்கு டெண்டர் விடுவதில் பிரச்சினை இருக்கும். அது அனைத்தும் பிப்ரவரி கடைசிக்குள் முடிந்தாலும், அவசர கதியில் தொடரை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இந்த பிரச்சனைகளை எல்லாம் நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

கங்குலி அரைசதம் வீண்... ஜெய் ஷா அணி அசத்தல் வெற்றி!

இதனால்தான், 2021ஆம் ஆண்டில் புதிதாக இரண்டு அணிகள் களமிறங்கமுடியாத சூழல் நிலவுவதாகக் கூறப்படுகிறது. மேலும், போட்டியை நேரலை செய்யும் தொலைக்காட்சிக்கு 2018 முதல் 2022ஆம் ஆண்டு வரை 60 போட்டிகள் வரை மட்டுமே ஒளிபரப்ப உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அவர்கள் 16,347.50 கோடி பிசிசிஐக்கு செலுத்துகின்றனர். போட்டிகள் மேலும் அதிகரித்தால் அவர்கள் மேலும் பெரிய தொகை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனையும் பிசிசிஐ கருத்தில்கொள்ளும் எனக் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்