தென் ஆப்ரிக்காவில் 19 வயதுக்கு உட்படோருக்கான 13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் மொத்தமாக 16 அணிகள் பங்கேற்கிறது. மொத்தமாக 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் இந்திய அணி ஏ பிரிவில் ஜப்பான், நியூசிலாந்து, இலங்கை அணிகளுடன் இடம் பெற்றுது.
இதன் முதல் காலிறுதியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இதேபோல பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இன்று நடக்கும் அரையிறுதியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது.
சுஷாந்த் மிரட்டல்
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஹைதர் அலி (56), ரோஹாயில் நசிர் (62) ஆகியோர் அரைசதம் அடித்து கைகொடுக்க ,பாகிஸ்தான் அணி 43.1 ஓவரில் 172 ரன்களுக்கு சுருண்டது.
ஜெயிஸ்வால் சதம்
சுலப இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஜெயிஸ்வால், சக்சேனா ஜோடி துவக்கம் அளித்தது. பாகிஸ்தான் பந்துவீச்சை இந்த ஜோடி நாலாபுறமும் சிதறடித்தது. இந்த ஜோடியை பிரிக்க பாகிஸ்தான் பவுலர்கள் எடுத்த எல்லா முயற்சியும் வீணானது. சீரான இடைவேளையில் பவுண்டரிகளும் சிக்சர்களுமாக பறக்கவிட்ட ஜெயிஸ்வால் சதம் அடித்து மிரட்டினார். இவருக்கு நல்ல கம்பெனி கொடுத்த சக்சேனா அரைசதம் விளாசினார். இதையடுத்து இந்திய அணி 35.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 176 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறி மிரட்டியது.
இது ஃபைனல் ராசி
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஏழாவது முறையாக ஃபைனலுக்கு முன்னேறி அசத்தியது. முன்னதாக இந்தியா அணி 2000, 2006, 2008, 2012, 2016, 2018 என ஃபைனக்கு முன்னேறியது. அதில் இரண்டு முறை (2000, 2008, 2012,2018) என நான்கு முறை கோப்பை வென்று சாதித்தது.
இதன் முதல் காலிறுதியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இதேபோல பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இன்று நடக்கும் அரையிறுதியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது.
சுஷாந்த் மிரட்டல்
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஹைதர் அலி (56), ரோஹாயில் நசிர் (62) ஆகியோர் அரைசதம் அடித்து கைகொடுக்க ,பாகிஸ்தான் அணி 43.1 ஓவரில் 172 ரன்களுக்கு சுருண்டது.
ஜெயிஸ்வால் சதம்
சுலப இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஜெயிஸ்வால், சக்சேனா ஜோடி துவக்கம் அளித்தது. பாகிஸ்தான் பந்துவீச்சை இந்த ஜோடி நாலாபுறமும் சிதறடித்தது. இந்த ஜோடியை பிரிக்க பாகிஸ்தான் பவுலர்கள் எடுத்த எல்லா முயற்சியும் வீணானது. சீரான இடைவேளையில் பவுண்டரிகளும் சிக்சர்களுமாக பறக்கவிட்ட ஜெயிஸ்வால் சதம் அடித்து மிரட்டினார். இவருக்கு நல்ல கம்பெனி கொடுத்த சக்சேனா அரைசதம் விளாசினார். இதையடுத்து இந்திய அணி 35.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 176 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறி மிரட்டியது.
இது ஃபைனல் ராசி
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஏழாவது முறையாக ஃபைனலுக்கு முன்னேறி அசத்தியது. முன்னதாக இந்தியா அணி 2000, 2006, 2008, 2012, 2016, 2018 என ஃபைனக்கு முன்னேறியது. அதில் இரண்டு முறை (2000, 2008, 2012,2018) என நான்கு முறை கோப்பை வென்று சாதித்தது.