ஆப்நகரம்

இந்தியாவுக்கு இதான் தேவை : பாடம் கற்றுக்கொடுத்த கோலி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான கோப்பையை இந்திய அணியின் இரண்டு கேப்டன்களான கோலி, ரகானே சேர்ந்து பெற்றனர்.

TOI Sports 28 Mar 2017, 12:11 pm
தரம்சாலா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான கோப்பையை இந்திய அணியின் இரண்டு கேப்டன்களான கோலி, ரகானே சேர்ந்து பெற்றனர்.
Samayam Tamil virat and rahane both gets the border gavaskar trophy from gavaskar
இந்தியாவுக்கு இதான் தேவை : பாடம் கற்றுக்கொடுத்த கோலி!


இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் மூன்று டெஸ்டின் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வென்றுள்ளது. மூன்றாவது டெஸ்ட் ’டிரா’வில் முடிந்தது.

இரு அணிகள் மோதிய நான்காவது டெஸ்ட் போட்டி, ஃபைனல் போட்டியாக அனல் பறக்க தரம்சாலாவில் நடந்தது. இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இந்நிலையில் பரிசு வழங்கும் விழாவில் இந்திய அணிக்கான பார்டர்- கவாஸ்கர் டிராபி கோப்பையை, ஜாம்பவான் கவாஸ்கர் வழங்கினார். அப்போது கடைசி டெஸ்டில் கேப்டனாக செயல்பட்ட ரகானேவுடன், இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி பெற்றார்.

ஒரு கேப்டன் இருக்கும் போது மற்றொரு வீரரின் பெயர் கேப்டன் பொறுப்புக்கு அடிபட்டாலே பொறுக்க முடியாத வீரர்கள் தற்போதுள்ள் நிலையில், தான் இல்லாத அணியை சிறப்பாக வழிநடத்திய காரணத்துக்காக கோப்பையை ரகானேவுடன் சேர்ந்து பெற்ற கேப்டன் விராட் கோலியின் செயல் இளம் வீரர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டான செயல்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்