லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு சேவக்கிற்கு போட்டியாக ரவி சாஸ்திரி விண்ணப்பிக்கலாம் என தெரிகிறது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணி 5 ஒருநாள், 1 டி-20 போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இத்தொடருக்கு முன்னதாக, இந்திய கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் கும்ளே இடையே கடுமையான கருத்து வேறுபாடு நிலவியது. இதன் விளைவாக தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார் கும்ளே.
ஆனால் அதன் பின் கேப்டன் கோலியைப்பற்றி ஒவ்வொரு விஷயமாக வெளியிட்ட வண்ணம் உள்ளார் கும்ளே. இந்நிலையில் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் தீவிரத்தில் பிசிசிஐ உள்ளது. இந்த போட்டியில் முன்னணியில் உள்ளார் முன்னாள் அதிரடி துவக்க வீரர் சேவக்.
இவரை தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஐதராபாத் அணியின் தற்போதைய பயிற்சியாளரான முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி உள்ளார். இந்நிலையில் இவர்களுக்கு போட்டியாக முன்னாள் இந்திய அணியின் இயக்குனராக இருந்த ரவி சாஸ்திரி களமிறங்க வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தனது பதவிக்கு உரிய அங்கீகாரம் மற்றும் உத்தரவாதம் அளித்தால் மட்டுமே ரவி சாஸ்திரி விண்ணபிக்க முடியும் என சாஸ்திரி தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணி 5 ஒருநாள், 1 டி-20 போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இத்தொடருக்கு முன்னதாக, இந்திய கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் கும்ளே இடையே கடுமையான கருத்து வேறுபாடு நிலவியது. இதன் விளைவாக தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார் கும்ளே.
ஆனால் அதன் பின் கேப்டன் கோலியைப்பற்றி ஒவ்வொரு விஷயமாக வெளியிட்ட வண்ணம் உள்ளார் கும்ளே. இந்நிலையில் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் தீவிரத்தில் பிசிசிஐ உள்ளது. இந்த போட்டியில் முன்னணியில் உள்ளார் முன்னாள் அதிரடி துவக்க வீரர் சேவக்.
இவரை தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஐதராபாத் அணியின் தற்போதைய பயிற்சியாளரான முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி உள்ளார். இந்நிலையில் இவர்களுக்கு போட்டியாக முன்னாள் இந்திய அணியின் இயக்குனராக இருந்த ரவி சாஸ்திரி களமிறங்க வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தனது பதவிக்கு உரிய அங்கீகாரம் மற்றும் உத்தரவாதம் அளித்தால் மட்டுமே ரவி சாஸ்திரி விண்ணபிக்க முடியும் என சாஸ்திரி தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.