ஆப்நகரம்

வேலைக்கு போகாததற்கு பழியை தோனி மேல் போட்ட இளைஞன்

இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையேயான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது, இளைஞர்கள் கொண்டுவந்திருந்த தோனி, கோலி ஆகியோரின் பேனர்கள் சுவாரஸ்யமாக இருந்தது.

TOI Sports 14 Dec 2017, 10:23 am
மொஹாலி : இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையேயான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது, இளைஞர்கள் கொண்டுவந்திருந்த தோனி, கோலி ஆகியோரின் பேனர்கள் சுவாரஸ்யமாக இருந்தது.
Samayam Tamil virat kohli and anushka sharma posters seen in mohali odi indvsl
வேலைக்கு போகாததற்கு பழியை தோனி மேல் போட்ட இளைஞன்

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாட வந்துள்ளது. டெஸ்ட் போட்டியை இந்தியா 1-0 என வென்றது. தொடர்ந்து நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது. தொடரை வெல்ல வேண்டுமென்றால் 2வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மாவின் இரட்டை சதம், தவான், சிரேயாஸ் ஐயர் ஆகியோரின் அரைசதத்தால் இந்தியா இமாலய ரன்களை குவித்தது.

இந்த போட்டியில் இந்தியா 141 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது ரசிகர்கள் சிலர் தோனி, கோலி ஆகியோரின் போஸ்டர்கள் கொண்டுவந்திருந்தது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.

தோனி தான் காரணம் :
இதில் ஒரு இளைஞன், ”இன்று என் வேலைக்கான முதல் நேர்காணல். ஆனால் செல்லவில்லை அதற்கு காரணம் தோனிதான்” என போஸ்டர் வைத்திருந்தார். இப்படி வேலைக்கு போகாததற்கு பலியை தோனி மேல் போட்டுள்ளார் அந்த இளைஞன்.



மற்றொரு இளைஞர், கோலி இந்த போட்டியில் விளையாடாவிட்டாலும், அவரின் புதுமாப்பிள்ளை கோலத்துடன் உள்ள புகைப்படத்தை போஸ்டராக “Virat weds Anushka” என வைத்திருந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்