ஆப்நகரம்

இந்திய வீரர்களுக்கு தென் ஆப்ரிக்காவில் சிறப்பு விருந்து!

தென் ஆப்ரிக்காவில் உள்ள இந்திய உயர் ஆணையத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சிறப்பு விருந்து வழங்கப்பட்டது.

Samayam Tamil 12 Jan 2018, 3:19 pm
ஜோகானஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில் உள்ள இந்திய உயர் ஆணையத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சிறப்பு விருந்து வழங்கப்பட்டது.
Samayam Tamil virat kohli and co embrace a visit to a special place ahead of the 2nd test
இந்திய வீரர்களுக்கு தென் ஆப்ரிக்காவில் சிறப்பு விருந்து!


தென் ஆப்ரிக்க சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் எளிய இலக்கை துரத்திய போதும் பேட்ஸ்மேன்கள் சொதப்ப, இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இரு அணிகள் மோதும் இராண்டாவது டெஸ்ட் போட்டி, நாளை செஞ்சுரியனில் துவங்குகிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


இந்நிலையில் ஜோகானஸ்பர்க்கில் உள்ள இந்திய உயர் ஆணையத்தில் கேப்டன் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு சிறப்பு விருந்து வழங்கப்பட்டது.


இதில் கேப்டன் கோலி உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களின் குடும்பத்தாருடன் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்