ஆப்நகரம்

‘கொரோனா நிவாரணம்’ கோலி இணையதளம் தொடக்கம்…7 நாட்கள்தான் டைம்!

கொரோனா நிவாரண தொகை திரட்ட விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா தம்பதி இணையதளம் ஒன்றைத் துவங்கியுள்ளனர்.

Samayam Tamil 8 May 2021, 6:55 am
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. ஒருநாளை சுமார் 3.50 லட்சம் பேர் நோய்த் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால், மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது.
Samayam Tamil விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா


இந்நிலையில், கொரோனாவை வெல்லவேண்டும் என்ற நோக்கில் விளையாட்டு வீரர்கள், கலைத்துறையினர், அரசியல் பிரபலங்கள் போன்றவர்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்த லிஸ்டில் தற்போது இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி, அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா ஆகியோரும் இணைந்துள்ளனர். கொரோனா நிதியுதவி திரட்ட இருவரும் சேர்ந்து ‘கொட்டோ’ என்ற பெயரில் இணையதளம் துவங்கியுள்ளனர். இதில் முதல் ஆளாக 2 கோடி நிதியுதவியும் செய்திருக்கிறார்கள்.

இதில் பொது மக்களும் நிதியுதவி செய்ய முடியும். இந்த இணைய தளம் 7 நாட்கள் வரை செயல்பாட்டில் இருக்கும். அதற்குள் சுமார் 7 கோடி ரூபாய் வரை நிதியுதவி திரட்ட இலக்கு நிர்ணயித்திருப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள விராட் கோலி, “நம் நாடு ஆபத்தான நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது. கடந்த ஆண்டிலிருந்தே மக்கள் அவதிக்குள்ளாகி வருவதால், நாங்கள் வேதனையடைந்துள்ளோம். நாம் ஒன்றிணைந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும். நம் நாட்டிற்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நமது உதவி தேவைப்படுகிறது. இதனால், நானும் மனைவி அனுஷ்கா ஷர்மாவும் இணைந்து நிதி திரட்ட முடிவு செய்து, ‘கெட்டோ’ என்ற இணையதளத்தைத் துவங்கியுள்ளோம். இந்த இணையதளத்தில் பொது மக்களும் நிதியுதவி அளிக்கலாம். தற்போதுவரை 2,37,13,595 கோடி ரூபாய் சேர்ந்துள்ளது. 2732 பேர் நிதியுதவி செய்துள்ளனர். 7 நாட்கள் வரை இந்த இணையதளம் இயங்கும். 7 கோடி ரூபாய் வரை நிதி திரட்டுவதே எங்கள் இலக்கு” எனத் தெரிவித்தார்.

சமீபத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஒரு கோடி ரூபாய், கொரோனா நிவாரணமாக வழங்கினார். ஐபிஎல் வீரர்கள் பாட் கம்மின்ஸ், ஷிகர் தவன், நிகோலஸ் பூரன், வர்ணனையாளர் பிரெட் லீ போன்றவர்களும் நிதியுதவி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்