ஆப்நகரம்

தோனியை விட கோலி தான் மூன்றாவது இடத்தில் பெஸ்ட்: பதான்!

முன்னாள் கேப்டன் தோனியை விட மூன்றாவது இடத்திற்கு சிறந்த வீரர் விராட் கோலி தான் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 16 Jun 2020, 5:14 pm
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி மூன்றாவது வீரராக களமிறங்கியிருந்தால் பல சாதனைகளை தகர்த்திருப்பார் என முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார். இதற்கிடையில் தோனியை விட மூன்றாவது இடத்திற்கு சிறந்த வீரர் விராட் கோலி தான் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Kohli-Dhoni


மூன்றாவது வீரராக களமிறங்கி தோனி மொத்தமாக 993 ரன்கள் அடித்துள்ளார். இவரின் சராசரி 82.75 ஆகும். தவிர, ஒருநாள் கிரிக்கெட்டில் தோனியின் அதிகபட்ச ஸ்கோரான 183 ரன்கள் கடந்த 2005 இல் ஜெய்ப்பூரில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் மூன்றாவது வீரராக களமிறங்கி அடித்தது தான். இந்நிலையில் மூன்றாவது இடத்திற்கு சரியான வீரர் கோலி தான் என இர்பான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இர்பான் கூறுகையில், “மூன்றாவது வீரராக விளையாட எல்லா வாய்ப்புகளும் தோனிக்கு இருந்தது. ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. தோனியையும் கோலியையும் ஒப்பிட்டால் நுணுக்கத்தில் கோலி தான் சிறந்தவர். அந்த இடத்துக்கு சரியான வீரரும் கோலி தான். அதற்காக நான் தோனியை குறைசொல்லவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். எனது தேர்வு எப்போதும் மூன்றாவது இடத்துக்கு விராட் தான்” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்