ஆப்நகரம்

பிசிசிஐ இப்படி பண்ணா ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டம்- பீல் பண்ணும் விராத் கோலி!

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இரு அணிகளும் நாக்பூர் சென்றுள்ளன.

TNN 23 Nov 2017, 4:51 pm
நாக்பூர்: இந்தியா-இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இரு அணிகளும் நாக்பூர் சென்றுள்ளன.
Samayam Tamil virat kohli blames bcci for not giving time for preparing for foreign tournaments
பிசிசிஐ இப்படி பண்ணா ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டம்- பீல் பண்ணும் விராத் கோலி!


நாக்பூரில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, ”இந்திய அணி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது அதற்கு தயார்படுத்திக் கொள்ள அவகாசம் அளிக்க வேண்டும்.

தென் ஆப்பிரிக்கா போன்ற அணிகளை அவர்களின் சொந்த நாட்டில் எதிர்கொள்ளும் போது அவர்களின் மைதானங்களுக்கு ஏற்ப அணியைத் தயார் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும். அணி விளையாடவில்லையென்றால் அணியையோ அல்லது வீரர்களை விமர்சனம் செய்கிறார்கள்.

ஆனால், அணியைத் தயார்செய்ய நேரம் அளிக்கவில்லையெனில் அணி மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்த நேரிடும்,” என்று தெரிவித்துள்ளார். இது போன்ற சம்பவங்கள், எதிர்காலங்களில் நடைபெறாமல் இருக்கும் வகையில் கல அட்டவணை தயார் செய்ய வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியுடன் மோதும் இந்திய அணி, இந்தத் தொடர் முடிந்த இரண்டு நாட்களிலேயே தென் ஆப்பிரிக்கா தொடரில் பங்கேற்க தென் ஆப்பிரிக்கா செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்