ஆப்நகரம்

1st ODI: இந்திய ஓபனர்கள் இவர்கள்தான்…உறுதிசெய்த விராட் கோலி!

முதல் ஒருநாள் போட்டியில் துவக்க வீரர்களாகக் களமிறங்கப் போவது யார் என்பது குறித்து விராட் கோலி பேசியுள்ளார்.

Samayam Tamil 22 Mar 2021, 5:15 pm
இந்தியா, இங்கிலாந்து இடையலான கடைசி டி20 போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இதில் துவக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் களமிறங்கி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தனர். ஆட்டத்திலும் அனல் பறந்தது. இவரும் சிறப்பான துவக்கம் தந்ததால் இந்திய அணி பெரிய ஸ்கோர் அடித்து வெற்றிபெற்றது.
Samayam Tamil விராட் கோலி


இதனால், அடுத்து நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ரோஹித் ஷர்மா, விராட் கோலி இருவரும் துவக்க வீரர்களாகக் களமிறங்குவார்களா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதுகுறித்து தற்போது பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கேப்டன் விராட் கோலி, துவக்க வீரர்களாக யார் களமிறங்குப் போகிறார்கள் என்பது குறித்துப் பேசினார்.

ஓபனர் இவர்கள்தான்:

“கண்டிப்பா, முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் இருவரும்தான் துவக்க வீரர்களாகக் களமிறங்குவார்கள். சமீப காலமாக இருவரும்தான் ஒருநாளில் தொடர்களில் ஓபனர்களாக இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

மூன்றாவது டி20 போட்டி முடிந்த பிறகு பேசிய விராட் கோலி, “நானும் ரோஹித்தும் சிறப்பாக விளையாடினோம். இருவருக்கும் இடையில் நல்ல புரிதல் இருந்தது. ஓபனராக இப்போட்டியில் களமிறங்கியதுபோல் இனிவரும் போட்டிகளிலும் இது சாத்தியமா எனத் தெரியவில்லை. வாய்ப்பு அமையும் பட்சித்தல் களமிறங்க வேண்டியதுதான். ஐபிஎல் தொடரிலும் தேவைப்பட்டால் துவக்க வீரராகக் களமிறங்குவேன். நான் ஓபனராக களமிறங்கியதால் சூர்யகுமாருக்கு அவருக்கான இடம் கிடைத்தது. மூன்றாவது வரிசையில் களமிறங்கிச் சிறப்பாக விளையாடினார்” எனத் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்