ஆப்நகரம்

எங்க மண்டையை உடைக்க கூட பும்ரா தயங்கமாட்டார்: ‘கிங்’ கோலி!

மும்பை : பயிற்சியின் போது கூட பேட்ஸ்மேன்களை சோதிக்க இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா கொஞ்சம் கூட தயங்கியதில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 13 Jan 2020, 5:38 pm
இந்தியா வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் ஒருநாள் போட்டி நாளை துவங்குகிறது. இதற்கான பயிற்சியில் இரு அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, பயிற்சியில் இந்திய பேட்ஸ்மேன்களின் தலை மற்றும் விலா எலும்புகளை சேதப்படுத்தடுத்தவும் தயங்கமாட்டார் என தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Virat Kohli


தயக்கமில்லை
இதுகுறித்து கோலி கூறுகையில், “என்னைப் பொறுத்தவரையில் பும்ரா மிகச்சிறந்த பவுலர். தற்போதுள்ள பவுலர்களில் உலகளவில் சிறந்த பவுலர் பும்ரா தான். அவருக்கு எதிரான பேட்டிங் செய்வது மிகவும் கடினமான விஷயம் தான். பயிற்சியில் கூட போட்டியில் செயல்படும் அதே திறனோடு செயல்படுவார். அவ்வப்போது விலா எலும்புகளை பேட்ஸ்மேனின் தலையை குறிவைத்து பவுலிங் செய்ய பும்ரா கொஞ்சம் கூட தயக்கப்படமாட்டார்.

கடின பயிற்சி
வலைப்பயிற்சியில் பும்ராவை எதிர் கொண்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்ட விராட் கோலி மேலும் கூறுகையில், பயிற்சியின் போது எப்போதும் சிறந்த பவுலரை எதிர்கொள்ள வேண்டும் என நான் எதிர்பார்ப்பேன். அதனால் எனக்கு நானே பும்ராவை எதிர்கொள்ள சவால் விடுத்துக்கொள்வேன். அவரின் பவுலிங்கில் அவ்வளவு எளிதாக பவுண்டரிகளை அடிக்க முடியாது.

இரண்டாவது முறை
கடந்த நான்கு ஆண்டுகளாக பும்ரா இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். வலைப்பயிற்சியின் போது அவருக்கு எதிராக இரண்டாவது முறையாக அவுட்டாகியுள்ளேன். கடந்த 2018 அடிலெய்டு டெஸ்ட் போட்டிக்கு முன்பான பயிற்சியில் அவுட்டாகினேன். இன்றையை பயிற்சியில் இரண்டாவது முறையாக அவுட்டாகினேன்.

ஆஸ்திரேலிய தொடர் அட்டவணை
ஜனவரி 14, 2020 - முதல் ஒருநாள் - மும்பை
ஜனவரி 17, 2020 - இரண்டாவது ஒருநாள் - ராஜ்கோட்
ஜனவரி 19, 2020 - மூன்றாவது ஒருநாள் - பெங்களூரு

அடுத்த செய்தி

டிரெண்டிங்