ஆப்நகரம்

விசாகபட்டனத்தை விரும்பும் கோலி !

விசாகப்பட்டன மைதானத்துக்கும் இந்திய கேப்டன் விராட் கோலிக்கும் இடையேயான காதல் தொடர்கிறது.

TOI Sports 17 Nov 2016, 4:39 pm
விசாகப்பட்டனம்: விசாகப்பட்டன மைதானத்துக்கும் இந்திய கேப்டன் விராட் கோலிக்கும் இடையேயான காதல் தொடர்கிறது.
Samayam Tamil virat kohli love continues in vishakapatnam
விசாகபட்டனத்தை விரும்பும் கோலி !


இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி ‘டிரா’வில் முடிந்தது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனத்தில் நடக்கிறது. இது இந்திய கேப்டன் விராட் கோலியின் புதிய மைல்கல்லான 50வது டெஸ்ட் போட்டியாகும்.

கோலிக்கும், விசாகப்பட்டன மைதானத்துக்கும் அதிக காதல் உள்ளது என்று தான் சொல்லவேண்டும். இம்மைதானத்தில் மொத்தமாக 5 இன்னிங்சில் விளையாடியுள்ள இவர், 3 இன்னிங்சில் சதம் அடித்துள்ளார். மற்ற இரண்டு இன்னிங்சிலும் 99 மற்றும் 65 ரன்கள் எடுத்துள்ளார்.

தவிர, தனது 50 டெஸ்ட் போட்டியில், சதம் அடித்த கோலி, இம்மைல்கல்லை எட்டிய 6வது இந்தியர் என்ற பெருமை பெற்றார். தவிர, ஒட்டுமொத்த டெஸ்ட் அரங்கில் தனது 14வது சதத்தை பூர்த்தி செய்தார். மேலும் டெஸ்ட் கேப்டனாக கோலி பதிவு செய்த 7வது சதம் இதுவாகும்.

இதற்கு முன் கவாஸ்கர், லட்சுமண், குண்டப்பா விஸ்வநாத், கபில் தேவ், உம்ரிகார் ஆகியோர் தங்களது 50வது டெஸ்டில் சதமடித்து அசத்தியுள்ளானர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்