ஆப்நகரம்

Virat Kohli: விராட் கோலிக்கு கேல் ரத்னா விருது வழங்கப்படும் - மத்திய அரசு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு இருவருக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Samayam Tamil 20 Sep 2018, 4:25 pm
புது டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு இருவருக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Samayam Tamil kohli


மத்திய அரசால் ஆண்டுதோறும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கி கெளரவித்து வருகின்றது.

இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருது வழங்க விளையாட்டு சங்கங்கள் மத்திய விளையாட்டு அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்தன.

அப்படி பரிந்துரை செய்யப்பட்ட வீரர்களின் செயல்பாடுகள் ஆராய்ந்து அவர்களின் சாதனையை பாராட்டும் விதமாக தேர்ந்தெடுக்கப்படுவர்.

அதனடிப்படையில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, பளுதூக்கும் வீராங்கனை மீரா பாய் சானு ஆகிய வீரர்களுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2 பேருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, 8 பேருக்கு துரோணாச்சார்யா, 20 பேருக்கு அர்ஜுனா விருதுகள் வழங்க மத்திய அரசு அறிவித்துள்ளது.

தடகளம் நீரஜ் சோப்ரா,ஹீமா தாஸ், ஜின்சன் ஜான்சன் உள்ளிட்ட 20 பேருக்கு அர்ஜுனா விருது வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த விருதுகள் செப்டம்பர் 25-ம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்