நியூயார்க்: உலகின் செல்வாக்குமிக்கவர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி ‘டாப்-100’ல் இடம் பிடித்தார். அமெரிக்காவின் 'டைம்' பத்திரிகை வெளியிட்ட உலகின் செல்வாக்குமிக்கவர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, இடம் பிடிததுள்ளார். அமெரிக்க டைம் பத்திரிகை ஆண்டுதோறும் உலகில் செல்வாக்குமிக்க பட்டியலை வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பட்டியலை நேற்று வெளியிட்டது.
அதில் கடந்த ஆண்டில் எல்லாவிதமான கிரிக்கெட் போட்டியிலும் சேர்த்து மொத்தமாக 2818 ரன்கள் குவித்த கோலிக்கு இடம் கிடைத்துள்ளது. இதில் 11 சதம் அடங்கும். முன்னாள் இலங்கை வீரர் குமார் சங்ககரா, ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆகியோருக்கு பின் ஒரே ஆண்டில் அதிக ரன்கள் அடித்த மூன்றாவது வீரர் கோலி தான்.
எதிரியும் நண்பனாவான்....
இவர் குறித்து டைம் பத்திரிக்கையில் சச்சின் எழுதியுள்ள பக்கத்தில்,‘கடந்த 2008 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த வீரர்களின் தேர்வுக்கு மிக முக்கியமானது. அப்போது முதல் முறையாக ஒரு இளம் வீரர் அணியை வழிநடத்துவதை கவனித்தேன். இன்று விராட் கோலி ஒரு கிரிக்கெட் சாம்பியன்.
எனது தந்தை,‘நான் என்ன செய்கிறேனோ அதில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். அப்படி செய்தால் காலங்கள் மாறும் போது எதிரிகளும், வெறுப்பவர்களும் எனது ரசிகர்களாக மாறிவிடுவார்கள் என,’ என்னிடம் அடிக்கடி சொல்வார்.
கிரிக்கெட்டை பொறுத்தவரையில் கோலியும் அந்த ரகம் தான். அவரின் சிறப்பான எதிர்காலத்துக்கு எனது வாழ்த்துக்கள்.கிரிக்கெட் மூலம் மேலும் பல வெற்றிகளையும், கவுரவத்தையும் இந்தியாவுக்கு கோலி நிச்சயமாக பெற்றுத்தருவார்.’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.
I wish him all the best for his career ahead and am confident he will continue to bring pride and glory to India through cricket. Go Virat!
அதில் கடந்த ஆண்டில் எல்லாவிதமான கிரிக்கெட் போட்டியிலும் சேர்த்து மொத்தமாக 2818 ரன்கள் குவித்த கோலிக்கு இடம் கிடைத்துள்ளது. இதில் 11 சதம் அடங்கும். முன்னாள் இலங்கை வீரர் குமார் சங்ககரா, ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆகியோருக்கு பின் ஒரே ஆண்டில் அதிக ரன்கள் அடித்த மூன்றாவது வீரர் கோலி தான்.
எதிரியும் நண்பனாவான்....
இவர் குறித்து டைம் பத்திரிக்கையில் சச்சின் எழுதியுள்ள பக்கத்தில்,‘கடந்த 2008 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த வீரர்களின் தேர்வுக்கு மிக முக்கியமானது. அப்போது முதல் முறையாக ஒரு இளம் வீரர் அணியை வழிநடத்துவதை கவனித்தேன். இன்று விராட் கோலி ஒரு கிரிக்கெட் சாம்பியன்.
எனது தந்தை,‘நான் என்ன செய்கிறேனோ அதில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். அப்படி செய்தால் காலங்கள் மாறும் போது எதிரிகளும், வெறுப்பவர்களும் எனது ரசிகர்களாக மாறிவிடுவார்கள் என,’ என்னிடம் அடிக்கடி சொல்வார்.
கிரிக்கெட்டை பொறுத்தவரையில் கோலியும் அந்த ரகம் தான். அவரின் சிறப்பான எதிர்காலத்துக்கு எனது வாழ்த்துக்கள்.கிரிக்கெட் மூலம் மேலும் பல வெற்றிகளையும், கவுரவத்தையும் இந்தியாவுக்கு கோலி நிச்சயமாக பெற்றுத்தருவார்.’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.
I wish him all the best for his career ahead and am confident he will continue to bring pride and glory to India through cricket. Go Virat!