ஆப்நகரம்

புஜாராவோடு விளையாடுவது எனக்கு பிடிக்காது: கோலி ஓபன் டாக்

இந்திய கிரிக்கெட் அணி இலங்கை உடனான 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி சிறப்பாக விளையாடி இரட்டை சதமடித்தார்

TNN 5 Dec 2017, 3:13 am
இந்திய கிரிக்கெட் அணி இலங்கை உடனான 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி சிறப்பாக விளையாடி இரட்டை சதமடித்தார்.
Samayam Tamil virat kohli said that he is not comfortable playing with pujara
புஜாராவோடு விளையாடுவது எனக்கு பிடிக்காது: கோலி ஓபன் டாக்


இந்நிலையில், இதன் 2ஆம் நாள் ஆட்டத்திற்கு பிறகு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென புஜாரா மைக்கை எடுத்துக்கொண்டு கேப்டன் விராத் கோலியை பேட்டி எடுக்க ஆரம்பித்தார்.

கலகலப்பாக நடைப்பெற்ற அந்தப் பேட்டியில் புஜாரா பல்வேறு கேள்விகளை விராத் கோலியிடம் கேட்டார். அதில் விராத் கோலிக்கு கிரிக்கெட்டில் பிடிக்காத வீரர் அல்லது யாருடன் விளையாட பிடிக்காது என்று கேள்வி எழுப்பினார்.



அந்தக் கேள்விக்குப் பதிலளித்த விராத் கோலி,”எனக்குப் புஜாராவுடன் விளையாடுவது பிடிக்காது. அவர் எப்போதுமே என்னைவிட சிறப்பாக விளையாடுவார். டென்னீஸ், கால்பந்து எல்லா விளையாட்டுகளிலும் என்னை வீழ்த்திவிடுவார்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய விராத் கோலி,”ஆரம்பத்தில் எனக்கு டெஸ்ட் போட்டியில் விளையாடுவது பிடிக்காது. புஜாரவைப் பார்த்துதான் பொறுமையாக ஆடக் கற்றுகொண்டேன்” என்றும் புஜாரவைப் புகழ்ந்துள்ளார் விராத் கோலி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்