கொழும்பு: ஆகஸ்ட்-15, சுதந்திர தினத்தையும் தாண்டி எனக்கு மிகவும் முக்கியமான நாள் என இந்திய கேப்டன் கோலி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 5 ஒருநாள், டி-20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கான கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இத்தொடருக்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் கண்டியில் தங்கியுள்ளனர். இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி வரும் 20ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில் இந்தியா, நேற்று தனது 71வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடியது.
இதற்காக இலங்கையில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள், மூவர்ண கொடி ஏற்றி சுதந்திரதினத்தை சிறப்பாக கொண்டாடினர். கேப்டன் கோலி கொடி ஏற்ற,பின் அனைத்து வீரர்களும் மரியாதை செலுத்தினர்.
Wishing everyone a very Happy Independence Day. It's more special for me since it's my Father's B'day also. 😊 #IndependenceDayIndia #JaiHind pic.twitter.com/ab01WBdu8i — Virat Kohli (@imVkohli) August 15, 2017 இதன் பின் இந்திய ரசிகர்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் சுதந்திர தின வாழ்த்து சொன்ன கோலி, அது அவருக்கு மிகவும் முக்கியமான நாள் என்றும் தெரிவித்தார். அதற்கு காரணம் அவருடைய தந்தையான பிரேம் கோலியின் பிறந்தநாள் என்பதை உருக்கமாக தெரிவித்தார். கோலியின் தந்தை கடந்த 2006ல் உயிரிழந்தார்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 5 ஒருநாள், டி-20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கான கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இத்தொடருக்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் கண்டியில் தங்கியுள்ளனர். இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி வரும் 20ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில் இந்தியா, நேற்று தனது 71வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடியது.
இதற்காக இலங்கையில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள், மூவர்ண கொடி ஏற்றி சுதந்திரதினத்தை சிறப்பாக கொண்டாடினர். கேப்டன் கோலி கொடி ஏற்ற,பின் அனைத்து வீரர்களும் மரியாதை செலுத்தினர்.
Wishing everyone a very Happy Independence Day. It's more special for me since it's my Father's B'day also. 😊 #IndependenceDayIndia #JaiHind pic.twitter.com/ab01WBdu8i — Virat Kohli (@imVkohli) August 15, 2017 இதன் பின் இந்திய ரசிகர்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் சுதந்திர தின வாழ்த்து சொன்ன கோலி, அது அவருக்கு மிகவும் முக்கியமான நாள் என்றும் தெரிவித்தார். அதற்கு காரணம் அவருடைய தந்தையான பிரேம் கோலியின் பிறந்தநாள் என்பதை உருக்கமாக தெரிவித்தார். கோலியின் தந்தை கடந்த 2006ல் உயிரிழந்தார்.