ஆப்நகரம்

‘தல’ தோனி பக்கத்துலயே இருந்ததால தான் எனக்கு இந்த தகுதி வந்துச்சு: கோலி!

புதுடெல்லி: ‘தோனி அருகிலேயே பீல்டிங் நின்று கொண்டு அவரை கவனித்துக்கொண்டிருந்ததால் தான், எனக்கு கேப்டனுக்கான தகுதி வந்தது.’ என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 25 Sep 2018, 6:08 pm
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வெற்றிக் கேப்டன் தோனி. இவரது தலைமையில் இந்திய அணி பல்வேறு உச்சத்தை எட்டியுள்ளது. தவிர, ஐசிசி.,யால் நடத்தப்படும் மூன்றுவிதமான உலகக்கோப்பையை வென்ற ஒரே இந்திய அணி கேப்டன் என்ற பெருமை பெற்றவர் தோனி.
Samayam Tamil 1


இந்நிலையில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி இளம் கோலி தலைமையிலான இந்திய அணியில் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இது இந்திய அணிக்கு பல்வேறு விதத்தில் உதவியாக உள்ளது. ஆலோசனை தேவைப்படும் நேரத்தில் தானாக முன்வந்து பீல்டிங்கிலும், பவுலிங்கிலும் ஆலோசனை வழங்குவார்.

இந்நிலையில், தோனி அருகிலேயே பீல்டிங் நின்று கொண்டு அவரை கவனித்துக்கொண்டிருந்ததால் தான், எனக்கு கேப்டனுக்கான தகுதி வந்தது. என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோலி கூறுகையில், ‘தோனிக்கு முன்பாக வேறு எந்த கேப்டனுடனும் அவ்வளவு நெருக்கம் இல்லை. போட்டியின் போது தோனி அருகிலேயே பீல்டிங் செய்வேன். இளம் வீரராக இருந்த போதும் அவரிடம் எனது கருத்துக்களை தெரிவிப்பேன். எனக்கு புதிதாக யோசிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடனே இருந்ததால் தான், இவ்வளவு விஷயங்களை கற்றுக்கொள்ள முடிந்தது.’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்