ஆப்நகரம்

கெத்தாக மீண்டும் கதையை தூக்கப்போகும் விராட் கோலி - பரிசுத் தொகை அள்ளும் பிசிசிஐ

டெஸ்ட் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி, இந்தாண்டுக்கான ஐசிசி கதையை பெற்று பரிசுத் தொகையை அள்ள உள்ளது.

Samayam Tamil 24 Feb 2018, 3:41 pm
டெஸ்ட் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி, இந்தாண்டுக்கான ஐசிசி கதையை பெற்று பரிசுத் தொகையை அள்ள உள்ளது.
Samayam Tamil virat kohli to be presented with test mace after cape town t20i
கெத்தாக மீண்டும் கதையை தூக்கப்போகும் விராட் கோலி - பரிசுத் தொகை அள்ளும் பிசிசிஐ


கடந்தாண்டு இந்தியா விளையாடிய அனைத்து டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களிலும் வென்று சாதித்துள்ளது. இதன் மூலம் 5313 புள்ளிகள், 121 ரேட்டிங்க் புள்ளிகள் பெற்று நம்பர் 1 என்ற இடத்தில் வலுவாக உள்ளது.

தென் ஆப்ரிக்கா 2வது இடம் :
இந்நிலையில் தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் ஒரு போட்டியில் வென்றால் கூட போதும், தனது 2வது இடத்தை தெ.ஆ தக்க வைத்துக் கொள்ள முடியும்.

அதே சமயம் ஆஸ்திரேலியா 3-0 அல்லது 4-0 என வெல்லும் பட்சத்தில் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறிவிடும்.

பரிசுத் தொகை :
ஐசிசி விதிப்படி, தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அணிக்கு ஐசிசி கதை வழங்கபட்டு $10 லட்சம் பரிசுத் தொகை (இந்திய மதிப்பில் 6 கோடியே, 48 லட்சம்) வழங்கப்படும்.

இரண்டாம் இடத்தில் உள்ள அணிக்கு $ 5 லட்சம் டாலர், 3வது இடத்தில் உள்ள் அணிக்கு $2 லட்சம், 4வது இடத்தில் உள்ள அணிக்கு $ 1லட்சம் டாலர் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்