ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனை என்ற பெருமை பெற்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜுக்கு வாழ்த்து கூறிய விராட் கோலி தவறான புகைப்படத்தை வெளியிட்டு நெட்டிசன்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் மகளிருக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனை என்ற பெருமையை வசப்படுத்தியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை போட்டியில் நேற்று விளையாடிய அவர் இச்சாதனையை படைத்துள்ளார்.
இதனை முன்னிட்டு மிதாலி ராஜுக்கு இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது பேஸ்புக் பக்கத்தில் வாழ்த்து கூறினார். தனது பதிவில், இந்திய கிரிக்கெட்டுக்கு பெருமை மிக்க தருணம் இது. மிதாலி ராஜ் ஒருநாள் கிரிக்கெட் அதிக ரன்கள் விளாசி சாதனையை படைத்துள்ளார் என்று பாராட்டியுள்ளார். அத்துடன் அவர் இணைத்துள்ள புகைப்படம் பிரச்னைக்கு வழிவகுத்துவிட்டது.
கோலி பதிவிட்ட படத்தில் இருப்பவர் மிதாலி ராஜ் இல்லை. அது இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை பூனம் ராவுத் களத்தில் இருந்தபோது எடுக்கப்பட்ட படம். இப்படி படத்தை தவறாக வெளியிட்டதும் நெட்டிசன்கள் கோலியின் அவசர குடுக்கைத்தனத்தை திட்டித்தீர்த்துவிட்டனர். உடனே, கோலி அந்த பதிவையே நீக்கிவிட்டார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் மகளிருக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனை என்ற பெருமையை வசப்படுத்தியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை போட்டியில் நேற்று விளையாடிய அவர் இச்சாதனையை படைத்துள்ளார்.
இதனை முன்னிட்டு மிதாலி ராஜுக்கு இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது பேஸ்புக் பக்கத்தில் வாழ்த்து கூறினார். தனது பதிவில், இந்திய கிரிக்கெட்டுக்கு பெருமை மிக்க தருணம் இது. மிதாலி ராஜ் ஒருநாள் கிரிக்கெட் அதிக ரன்கள் விளாசி சாதனையை படைத்துள்ளார் என்று பாராட்டியுள்ளார். அத்துடன் அவர் இணைத்துள்ள புகைப்படம் பிரச்னைக்கு வழிவகுத்துவிட்டது.
கோலி பதிவிட்ட படத்தில் இருப்பவர் மிதாலி ராஜ் இல்லை. அது இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை பூனம் ராவுத் களத்தில் இருந்தபோது எடுக்கப்பட்ட படம். இப்படி படத்தை தவறாக வெளியிட்டதும் நெட்டிசன்கள் கோலியின் அவசர குடுக்கைத்தனத்தை திட்டித்தீர்த்துவிட்டனர். உடனே, கோலி அந்த பதிவையே நீக்கிவிட்டார்.