ஆப்நகரம்

இந்த சம்பளம் வேர்க்கடலைக்கு சமம்: சாஸ்திரியின் புகாரை ஏற்கிறாரா கோலி?

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் போதாது என்று கேப்டன் விராட் கோலி அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNN 5 Apr 2017, 11:48 am
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் போதாது என்று கேப்டன் விராட் கோலி அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil virat kohli unhappy with bccis pay hike demands more
இந்த சம்பளம் வேர்க்கடலைக்கு சமம்: சாஸ்திரியின் புகாரை ஏற்கிறாரா கோலி?


அண்மையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஒப்பந்த வீரர்களுக்கான ஊதியம் இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டது. ஆனால், இந்த ஊதிய உயர்வு போதாது என்ற அதிருப்தி மனநிலை வீரர்களிடையே ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் வர்ணணையாளருமான ரவிசாஸ்திரி, இந்திய வீரர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளார். “2 கோடி ரூபாய் என்பது வேர்க்கடலைக்குத்தான் சமம். டெஸ்ட் அணி வீரர்களுக்கு ஒப்பந்தத்தொகை உயர்ந்தப்பட்டிருக்க வேண்டும். உலகின் தலை சிறந்த வீரர்களுக்கு அளிக்கப்படும் அளவிற்கு புஜாராவுக்கு ஊதியத்தை அதிகப்படுத்தியிருக்க வேண்டும்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, மற்ற நாடுகளில் கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட இந்திய வீரர்களுக்கு மிகவும் குறைவான ஊதியம் தான் வழங்கப்படுகிறது என்று கேப்டன் விராட் கோலியும் அதிருப்தி தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்