ஆப்நகரம்

தோனியை போல திரும்ப தன் திறமையை நிரூபிப்பான் கோலி : கபில் தேவ்

அடுத்தமாதம் தொடங்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் கேப்டன் கோலி தன் முழு உத்வேகத்துடன் சிறப்பான தாக்குதல் பேட்டிங்கை அரங்கேற்றுவார் என முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

TOI Sports 18 May 2017, 4:18 pm
அடுத்தமாதம் தொடங்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் கேப்டன் கோலி தன் முழு உத்வேகத்துடன் சிறப்பான தாக்குதல் பேட்டிங்கை அரங்கேற்றுவார் என முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil virat kohli will bounce back in icc champions trophy 2017 says kapil dev
தோனியை போல திரும்ப தன் திறமையை நிரூபிப்பான் கோலி : கபில் தேவ்


ஜூன் 1 முதல் 18ம் தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் தொடங்க உள்ளது. இப்போட்டியில் இந்தியா சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது என கபில் தேவ் கூறியுள்ளார்.

கபில் தேவ் கூறுகையில், “காயம் காரணமாக ஐபிஎல்.,லின் முதல் சில போட்டிகளில் பெங்களூருக்காக விளையாடாவிட்டாலும், தன் அணிக்கு திரும்பிய பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

கோலியை தவிர மற்ற வீரர்கள் பொறுப்புணர்ந்து ஆடவில்லை. அதனால் பெங்களூரு அணி ஜொலிக்கவில்லை.

கடந்த சீசனீல் கோலி 973 ரன்கள் குவித்து அசத்தினார். அதுமட்டுமல்லாமல் 16 டெஸ்ட் போட்டிகளில் அசத்தலாக விளையாடினார். இந்த சீசனில் கூட 10 போட்டியில் விளையாடியுள்ள கோலி 308 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த 25 வீரர்களில் கோலி மட்டும் பெங்களூரு அணி சார்பாக இடம்பெற்றுள்ளார்.

கடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது.அதே பாணியின் கோலி தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்லும். கோலி முன்பை போலவே சாம்பியன்ஸ் டிராபியிலும் அதிரடியை காட்டுவார் என நம்புகிறேன்.” என கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்