ஆப்நகரம்

போனதடவ விட்டதுக்கு இந்த தடவ ‘கிங்’ கோலி சேர்த்து வெளுத்து வாங்குவார்: வாசிம் ஜாபர்!

கடந்த முறை செய்த தவறை இம்முறை கோலி செய்யமாட்டார் என இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 26 Jul 2018, 9:39 pm
புதுடெல்லி: கடந்த முறை செய்த தவறை இம்முறை கோலி செய்யமாட்டார் என இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 6


இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 3 டி-20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. டி-20 தொடரை இந்திய அணி (2-1) வென்றது. ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி (2-1) கைப்பற்றியது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 1ம் தேதி பர்மிங்ஹாமில் துவங்குகிறது.

ஜாபர் கணிப்பு:
இந்நிலையில் கடந்த முறை செய்த தவறை இம்முறை கோலி செய்யமாட்டார் என இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வாசிம் ஜாபர் கூறுகையில்,‘கடந்த முறை இங்கிலாந்து மண்ணில் கோலி தடுமாறினார். ஆனால் அதற்கும் சேர்த்து இம்முறை இங்கிலாந்து பவுலர்களை அவர் நிச்சயமாக பதம் பார்ப்பார். ‘ என்றார்.

NEW DELHI: Former Indian opener Wasim Jaffer is confident that captain Virat Kohli will put his last poor outing in England behind and will score runs this time around.

அடுத்த செய்தி

டிரெண்டிங்