ஆப்நகரம்

பயிற்சியில் பிச்சு.. எடுக்கும் இந்திய வீரரகள்: கோலி, முரளி விஜய் அரைசதம்!

இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய வீரர்கள் முரளி விஜய், கோலி, ராகுல், தினேஷ் கார்த்திக் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர்.

Samayam Tamil 25 Jul 2018, 10:51 pm
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய வீரர்கள் முரளி விஜய், கோலி, ராகுல், தினேஷ் கார்த்திக் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர்.
Samayam Tamil 5



இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 3 டி-20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. டி-20 தொடரை இந்திய அணி (2-1) வென்றது. ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி (2-1) கைப்பற்றியது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. இதற்கு முன்பாக மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் எக்ஸ்சஸ் அணிக்கு எதிராக இந்திய அணி பங்கேற்கிறது.

மோசமான மைதானம்:
இந்த பயிற்சிப்போட்டி இங்கிலாந்தின் கிளம்ஸ்போர்டில் நடக்கிறது. முதலில் நான்கு நாட்கள் நடக்கயிருந்த இந்த போட்டி, மைதானம் மிக மோசமாக இருப்பதால், மூன்று நாட்களாக குறைக்கவேண்டும் என்ற பிசிசிஐ.,யின் கோரிக்கையை ஏற்று இங்கிலாந்து அணி போட்டியை 3 நாட்களாக குறைத்தது.

நான்கு பேர் அரைசதம்:
இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு முரளி விஜய் (53), கோலி (68), ராகுல் (58) ஆகியோர் அரைசதம் அடித்து கைகொடுத்தனர். இதையடுத்து முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 322 ரன்கள் எடுத்துள்ளது. தினேஷ் கார்த்திக் (82), ஹர்திக் பாண்டியா (33) அவுட்டாகாமல் உள்ளனர்.

Virat Kohli and Murali Vijay scored contrasting fifties to put India in control against Essex in their three-day warm-up match in Chelmsford on Wednesday.

அடுத்த செய்தி

டிரெண்டிங்