ஆப்நகரம்

இங்கிலாந்துக்கு இருக்க ‘தில்’.... இந்தியாவுக்கு இருக்கா? : சேவக்!

இங்கிலாந்து அணியில் போப் விளையாடவுள்ளார், இதே போல இந்திய அணியும் இரண்டாவது டெஸ்டில் புஜாராவை தேர்வு செய்யுமா? என முன்னாள் இந்திய அதிரடி துவக்க வீரர் புஜாரா கேள்வி எழுப்பியுள்ளார்.

Samayam Tamil 6 Aug 2018, 5:09 pm
லண்டன்: இங்கிலாந்து அணியில் போப் விளையாடவுள்ளார், இதே போல இந்திய அணியும் இரண்டாவது டெஸ்டில் புஜாராவை தேர்வு செய்யுமா? என முன்னாள் இந்திய அதிரடி துவக்க வீரர் புஜாரா கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil 10


இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 3 டி-20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. டி-20 தொடரை இந்திய அணி (2-1) வென்றது. ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி (2-1) கைப்பற்றியது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. எட்ஜ்பாஸ்டனில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

தனி ஒருவன் கோலி.....
இந்நிலையில் எட்ஜ்பாஸ்டனில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய பவுலர்கள் வேகத்தில் மிரட்டினாலும், இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் வரிசையாக சொதப்பினர். கேப்டன் கோலி மட்டும் தனி ஒருவனாக இந்திய அணி எடுத்த ஒட்டு மொத்த ரன்களில் பாதிக்கு மேல் சேர்த்தார்.

புஜாரா இல்லை....
இந்நிலையில் இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் வீரரான புஜாராவை இந்திய அணி தேர்வு செய்யவில்லை. இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதுவும் ஒரு வகையில், இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

‘தில்’ இருக்கா?
இந்நிலையில், இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியில் போப் விளையாடவுள்ளார், இதே போல இந்திய அணியும் இரண்டாவது டெஸ்டில் புஜாராவை தேர்வு செய்யுமா? என முன்னாள் இந்திய அதிரடி துவக்க வீரர் புஜாரா கேள்வி எழுப்பியுள்ளார். இதை கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஏற்றுக்கொள்வார்களா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Former opener Virender Sehwag believes that India should give Pujara a chance in the second Test match at Lord’s and he expressed his opinion on Twitter.

அடுத்த செய்தி

டிரெண்டிங்