ஆப்நகரம்

வீரு புண்ணியத்தில் வாய்ப்பு கிடைத்தது: இஷாந்த் சர்மா மகிழ்ச்சி

பத்தாவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு தனக்கு வாய்ப்பு ஏற்படுத்தித்தந்தவர் வீரேந்திர சேவாக் என்று இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

TOI Contributor 5 Apr 2017, 10:23 am
பத்தாவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு தனக்கு வாய்ப்பு ஏற்படுத்தித்தந்தவர் வீரேந்திர சேவாக் என்று இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil viru hand in ishants kings xi punjab selection
வீரு புண்ணியத்தில் வாய்ப்பு கிடைத்தது: இஷாந்த் சர்மா மகிழ்ச்சி


10வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இன்று ஹைதராபாத்தில் தொடங்குகிறது. முதல் லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த ஆட்டம் இன்றிரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

இத்தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா எந்த அணியாலும் வாங்கப்படவில்லை. அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பல ஆண்டுகளாக விளையாடி வரும் அனுபவ வீரரான அவருக்கு அடிப்படை ஏலத்தொகை ரூ.2 கோடியாக அறிவிக்கப்பட்டது. ஆனால், எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.

இதனால், இஷாந்த இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் தான் இஷாந்த் சர்மாவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் போன் செய்து பேசியுள்ளார். அவர் மூலம் தான் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது என்று இஷாந்த் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் உடனடியாக கையெழுத்திடவில்லை எனினும் அவர் அந்த அணிக்காக விளையாடவுள்ளது உறுதியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்