ஆப்நகரம்

அதுக்கு தானே ராகுலை சேர்த்தோம்: கும்ளே!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் கே.எல்.ராகுல் நிச்சயம் விளையாடுவார் என பயிற்சியாளர் கும்ளே தெரிவித்துள்ளார்.

TOI Sports 15 Nov 2016, 7:02 pm
விசாகப்பட்டினம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் கே.எல்.ராகுல் நிச்சயம் விளையாடுவார் என பயிற்சியாளர் கும்ளே தெரிவித்துள்ளார்.
Samayam Tamil want rahul in starting xi thats why he is selected says kumble
அதுக்கு தானே ராகுலை சேர்த்தோம்: கும்ளே!


இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட், ‘டிரா’ ஆனது. சமீபத்தில் முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது, துவக்க வீரர் கே.எல்.ராகுல் காயமடைந்து அணியில் இருந்து வெளியேறினார்.

இதனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சீனியர் வீரர் காம்பிருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இதை காம்பிர் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. இதனால் இங்கிலாந்து எதிராக விசாகப்பட்டினத்தில் நடக்கவுள்ள இரண்டாவது டெஸ்டில், காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்த தொடக்க வீரர் கே எல் ராகுல், 16வது வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பயிற்சியாளர் கும்ளே கூறியது:
இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்க இன்னும் இரண்டு நாட்கள் உள்ளது. அதனால் எந்த பிரச்சனையும் இல்லாமல் ராகுல் பங்கேற்பார் என நம்புகிறேன். அணியின் துவக்கத்தை வலுப்படுத்த விளையாடும் லெவனில் நிச்சயம் ராகுல் இடம் பிடிப்பார். அதற்காகத்தான் அவரை அணியில் சேர்த்துள்ளோம். தவிர, இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி, தனது பவுலிங்கை பலப்படுத்த திட்டமிட்டுள்ளதால் நமது அணியில் பேட்டிங்கை பலப்படுத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு கும்ளே கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்