ஆப்நகரம்

கூட்டு சேர்ந்து வேட்டையாடும் வார்னர் – தவான்!

பத்தாவது ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற பெருமையை ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் வார்னர், தவான் ஆகியோர் பெற்றுள்ளனர்.

TNN 17 May 2017, 9:26 pm
பத்தாவது ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற பெருமையை ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் வார்னர், தவான் ஆகியோர் பெற்றுள்ளனர்.
Samayam Tamil warner and dhawan tops most partnership runs in ipl 2017
கூட்டு சேர்ந்து வேட்டையாடும் வார்னர் – தவான்!


பத்தாவது ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுகள் முடிந்துள்ள நிலையில் நேற்று ப்ளே-ஆப் சுற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் மும்பை - புனே அணிகள் மோதின. இதில் புனே அணி மும்பை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டியில் இடம்பிடித்தது.

இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

அந்த அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் ஷிகர் தவான் ஜோடி பத்தாவது ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த இணை என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இத்தொடரில் இதுவரை வார்னர் – தவான் ஜோடி 646 ரன்கள் குவித்துள்ளனர்.

கடந்த 2016ஆம் ஆண்டில் 731 ரன்களும் 2015ஆம் ஆண்டு 622 ரன்களும் இந்த ஜோடி மூலம் வந்துள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்