ஆப்நகரம்

பஞ்சாபிற்கு வழிக்கு வராத வார்னர் : 160 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஐதராபாத்

பஞ்சாப் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ளமுடியாமல் திணறிய ஐதராபாத் அணி 159 ரன்களில் சுருண்டது.

TOI Sports 17 Apr 2017, 9:51 pm
ஐதராபாத் : பஞ்சாப் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ளமுடியாமல் திணறிய ஐதராபாத் அணி 159 ரன்களில் சுருண்டது.
Samayam Tamil warners struggling fifty carries srh to 159
பஞ்சாபிற்கு வழிக்கு வராத வார்னர் : 160 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஐதராபாத்


10வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகின்றது. ஐதராபாத்தில் நடைப்பெறும் 19வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் மேக்ஸ்வெல் பவுலிங் செய்ய தீர்மானித்தார்.

தடுமாறிய ஐதராபாத்:
தொடக்க வீரர் வார்னரை (70) தவிர, தவான் 15, ஹென்ரிக்ஸ், யுவராஜ் சிங் 0, ஹூடா 12, முகமது நபி 2 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நமன் ஓஜா 20 பந்தில் 34 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார்.

குத்துகல் போல நின்ற வார்னர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 54 பந்தில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகள் உட்பட 70 ரன்களை குவித்து, ஐதராபாத் அணி 159 என்ற கெளரவமான ரன் எடுக்க வழிவகுத்தார். பஞ்சாப் அணியின் மோகித் சர்மா, அக்ஸர் படேல் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்