இந்தியா, இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மோடேராவில் நேற்று நடைபெற்று. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி, முதல் வரிசை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், ஸ்கோர் வேகத்தில் மந்தம் ஏற்பட்டது. இந்நிலையில் 5 இடத்தில் களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் 67 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை 124/7ஆக உயர்த்தினார். எளிய இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணி 130/2 ரன்கள் அடித்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இங்கிலாந்து அணி வெற்றி இலக்கை துரத்தி முன்னேறிக்கொண்டிருந்தபோது, வாஷிங்டன் வீசிய 14ஆவது ஓவரின் இறுதிப் பந்தை டேவிட் மாலன் எதிர்கொண்டார்.அவர் பந்தைத் தூக்கி அடிக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக எதிர்முனை பேட்ஸ்மேன் பேர்ஸ்டோ ஹெல்மெட்டை அதிவேகமாகத் தாக்கி கீழே விழுந்தது. பந்தை கேட்ச் பிடிக்க வந்த வாஷிங்டன் சுந்தர் ஏமாற்றம் அடைந்தார்.
சூர்யகுமார் அடுத்த அஸ்வினா? கோலி கையில் முடிவு!
இதனால், பேர்ஸ்டோவிடம் வார்த்தைப் போரில் ஈடுபட்டார். பேர்ஸ்டோ, இது எதேச்சையாக நடந்தது என விளக்கம் அளித்துக்கொண்டிருந்தபோது நடுவர் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினார்.
பின்னர், போட்டி சுமுகமாக நடைபெற்றது. இங்கிலாந்து அணியும் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் வாஷிங்டன் சுந்தர் 2.3 ஓவர்கள் மட்டும் வீசி 18 ரன்களை விட்டுக்கொடுத்து ஜேசன் ராய் விக்கெட்டை வீழ்த்தினார்.
இவர் பவர்பிளேவில் சிறப்பாகப் பந்துவீசக் கூடியவர். இப்போட்டியில் 12ஆவது ஓவரிலிருந்து மட்டுமே பந்துவீச வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி, முதல் வரிசை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், ஸ்கோர் வேகத்தில் மந்தம் ஏற்பட்டது. இந்நிலையில் 5 இடத்தில் களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் 67 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை 124/7ஆக உயர்த்தினார். எளிய இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணி 130/2 ரன்கள் அடித்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இங்கிலாந்து அணி வெற்றி இலக்கை துரத்தி முன்னேறிக்கொண்டிருந்தபோது, வாஷிங்டன் வீசிய 14ஆவது ஓவரின் இறுதிப் பந்தை டேவிட் மாலன் எதிர்கொண்டார்.அவர் பந்தைத் தூக்கி அடிக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக எதிர்முனை பேட்ஸ்மேன் பேர்ஸ்டோ ஹெல்மெட்டை அதிவேகமாகத் தாக்கி கீழே விழுந்தது. பந்தை கேட்ச் பிடிக்க வந்த வாஷிங்டன் சுந்தர் ஏமாற்றம் அடைந்தார்.
சூர்யகுமார் அடுத்த அஸ்வினா? கோலி கையில் முடிவு!
இதனால், பேர்ஸ்டோவிடம் வார்த்தைப் போரில் ஈடுபட்டார். பேர்ஸ்டோ, இது எதேச்சையாக நடந்தது என விளக்கம் அளித்துக்கொண்டிருந்தபோது நடுவர் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினார்.
பின்னர், போட்டி சுமுகமாக நடைபெற்றது. இங்கிலாந்து அணியும் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் வாஷிங்டன் சுந்தர் 2.3 ஓவர்கள் மட்டும் வீசி 18 ரன்களை விட்டுக்கொடுத்து ஜேசன் ராய் விக்கெட்டை வீழ்த்தினார்.
இவர் பவர்பிளேவில் சிறப்பாகப் பந்துவீசக் கூடியவர். இப்போட்டியில் 12ஆவது ஓவரிலிருந்து மட்டுமே பந்துவீச வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.