அகமதாபாத், மோடேராவில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வுசெய்து முதல் இன்னிங்ஸில் 205/10 ரன்கள் சேர்த்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 365 ரன்களுக்கு ஆட்டமிழந்து 160 ரன்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸ் களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி 6/0 ரன்கள் எடுத்துள்ள நிலையில் மூன்றாவது நாள் ஆட்டத்தின் முதல் செஷன் நிறைவடைந்தது.
இரண்டாவது நாள் ஆட்டம் நிறைவடைந்தபோது வாஷிங்டன் சுந்தர் 60 (117), அக்ஷர் படேல் 11 (34) களத்தில் இருந்தார்கள். இன்றைய நாள் துவக்கத்திலிருந்தே இருவரும் அதிரடி காட்டியதால், இங்கிலாந்து அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இருவரும் ஸ்பின்னர்களை திறம்பட எதிர்கொண்டார்கள்.
தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சிறப்பான முறையில் விளையாடி அரை சதம் கடந்தார். தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டு 90 ரன்களைக் கடந்து விளையாடி வந்தார். அப்போது, அக்ஷர் படேல் 43 (97) எதிர்பாராத விதமாக ரன்-அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய இஷாந்த் ஷர்மா, முகமது சிராஜ் டக்-அவுட் ஆனார்கள். இதனால், வாஷிங்டன் சுந்தர் 96* (174) சதமடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இறுதியில் இந்திய அணி 365 ரன்கள் குவித்து 160 ரன்கள் முன்னிலை பெற்றது.
இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் நான்கு விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். ஜேம்ஸ் ஆண்டர்சன் மூன்று, ஜாக் லீச் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர். தொடர்ந்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. துவக்க வீரர்கள் ஜாக் கிரௌலி 5* (12), டோமினிக் சிப்லி 1* (6) களத்தில் உள்ளார்கள். மூன்றாவது நாள் ஆட்டத்தின் முதல் செஷன் நிறைவடைந்துள்ளது.
இரண்டாவது நாள் ஆட்டம் நிறைவடைந்தபோது வாஷிங்டன் சுந்தர் 60 (117), அக்ஷர் படேல் 11 (34) களத்தில் இருந்தார்கள். இன்றைய நாள் துவக்கத்திலிருந்தே இருவரும் அதிரடி காட்டியதால், இங்கிலாந்து அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இருவரும் ஸ்பின்னர்களை திறம்பட எதிர்கொண்டார்கள்.
தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சிறப்பான முறையில் விளையாடி அரை சதம் கடந்தார். தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டு 90 ரன்களைக் கடந்து விளையாடி வந்தார். அப்போது, அக்ஷர் படேல் 43 (97) எதிர்பாராத விதமாக ரன்-அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய இஷாந்த் ஷர்மா, முகமது சிராஜ் டக்-அவுட் ஆனார்கள். இதனால், வாஷிங்டன் சுந்தர் 96* (174) சதமடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இறுதியில் இந்திய அணி 365 ரன்கள் குவித்து 160 ரன்கள் முன்னிலை பெற்றது.
இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் நான்கு விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். ஜேம்ஸ் ஆண்டர்சன் மூன்று, ஜாக் லீச் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர். தொடர்ந்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. துவக்க வீரர்கள் ஜாக் கிரௌலி 5* (12), டோமினிக் சிப்லி 1* (6) களத்தில் உள்ளார்கள். மூன்றாவது நாள் ஆட்டத்தின் முதல் செஷன் நிறைவடைந்துள்ளது.