ஆப்நகரம்

‘நம்ப முடியவில்லை...ல்லை..ல்லை’…28 பந்தில் 74 ரன்கள்: புஜாரா மீண்டும் மிரட்டல் அடி…வீடியோ இதோ!

ஒருநாள் கிரிக்கெட்டில் புஜாரா மீண்டும் மிரட்டலாக விளையாடி சதம் அடித்துள்ளார்.

Samayam Tamil 15 Aug 2022, 6:53 am
சேத்தவஸ்வர் புஜாரா கடந்த இரண்டு வருடங்களாக பேட்டிங்கில் சிறப்பாக சோபிக்கவில்லை. இதனால், இந்தாண்டு துவக்கத்தில் இந்தியாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கப்பட்டார்.
Samayam Tamil சேத்தஸ்வர் புஜாரா


2012ஆம் ஆண்டிற்கு பிறகு உள்நாட்டில் நடக்கும் டெஸ்டில் புஜாரா கலந்துகொள்ளாதது இதுதான் முதல்முறை. இதனால், புஜாராவின் கிரிக்கெட் வாழ்க்கை விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தன்னுடைய பார்மை மீட்டெடுக்க புஜாரா தற்போது கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.

டெஸ்டில் மிரட்டல்:

சக்ஸஸ் அணிக்காக முதலில் கவுண்டி டெஸ்ட் தொடரில் பங்கேற்ற அவர் வெறும் 13 இன்னிங்ஸ்களில் 3 இரட்டைகளுடன், 5 சதங்கள் உட்பட 1094 ரன்களை குவித்து பிரமிக்க வைத்தார். அதிகபட்ச ஸ்கோர் 231 ஆகும். அப்படி புஜாரா அதிரடி காட்டியதால், கடந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஒருநாளிலும் காட்டடி:


புஜாராவின் அதிரடி அத்தோடு முடிந்துவிடவில்லை. தற்போது ராயல் லண்டன் கப் ஒருநாள் தொடரில் சக்ஸஸ் பங்கேற்று விளையாடி வரும் இவர், இத்தொடரிலும் காட்டடி அடித்து வருகிறார். சமீபத்தில் வார்விக்ஷிர் அணிக்கு எதிராக 79 பந்துகளில் 107 ரன்களை குவித்து மிரள வைத்தார். குறிப்பாக, அப்போட்டியில் ஒரே ஓவரில் 22 ரன்களை சேர்த்தும் அசத்தினார்.



இதனால், இத்தொடரில் புஜாரா மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சர்ரே அணிக்கு எதிராக வெறும் 131 பந்துகளில் 174 ரன்களை குவித்து மீண்டும் பிரமிக்க வைத்துள்ளார். முதலில் 103 பந்துகளில் 100 ரன்களை கடந்த அவர் அடுத்த 28 பந்துகளில் 74 ரன்களை சேர்த்தார். இதில் 20 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்