ஆப்நகரம்

வேறு வழியே இல்லை! இப்படித்தான் குத்தாட்டம் போடனும்! இந்தியா வெற்றியை கொண்டாடும் ரசிகை!

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய வெற்றியை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர்.

TNN 18 Jun 2017, 12:26 pm
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய வெற்றியை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர்.
Samayam Tamil watch fans celebrate in edgbaston as india beat bangladesh by 9 wickets
வேறு வழியே இல்லை! இப்படித்தான் குத்தாட்டம் போடனும்! இந்தியா வெற்றியை கொண்டாடும் ரசிகை!


இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பையான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் சர்வதேச தரவரிசையில் ‘டாப் -8’ இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கிற்றன. முடிவை எட்டிய இந்த தொடரின் 2வது அரையிறுதிப் போட்டி நேற்று நடந்தது. இதில், இந்திய அணி, வங்கதேச அணியை எதிர்கொண்டது.

#WATCH Fans celebrate in Edgbaston as India beat Bangladesh by 9 wickets #ChampionsTrophy2017 pic.twitter.com/nXhZpWb13b — ANI (@ANI_news) June 15, 2017 முதலில் ஆடிய வங்கதேச அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. இதில், இக்பால் (70), முஷ்பிகுர் ரஹீம் (61) அதிக ரன்கள் சேர்த்தனர். பின்னர் எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஆரம்பமே அமர்க்களம் தான். ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா இருவரும் நல்ல தொடக்கம் தந்தனர். ஷிகர் 46 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் கோலி கொஞ்சம் அசராத ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
Fans celebrate in Edgbaston as India beat Bangladesh by 9 wickets #ChampionsTrophy2017 pic.twitter.com/TsK35LhzPK — ANI (@ANI_news) June 15, 2017 இந்நிலையில் 40.1 ஓவரில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து இந்திய அணி 265 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், மைதானத்திற்கு வெளியிலேயே நடுத்தெரு என்று கூட பார்க்காமல் குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்