ஆப்நகரம்

யாரைப் பார்த்து என்ன சொல்றீங்க... பொங்கி எழுந்த இம்ரான் தாகிர்

இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியின் போது இம்ரான் தாகிரை இந்திய ரசிகர்கள் சிலர் இன ரீதியாக விமர்சித்ததாக புகார் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 12 Feb 2018, 9:08 pm
ஜோகனஸ்பெர்க் : இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியின் போது இம்ரான் தாகிரை இந்திய ரசிகர்கள் சிலர் இன ரீதியாக விமர்சித்ததாக புகார் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil watch imran tahir in heated argument with indian fans after getting abuse probe launched
யாரைப் பார்த்து என்ன சொல்றீங்க... பொங்கி எழுந்த இம்ரான் தாகிர்


தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. டெஸ்ட் தொடரை 2-1 என இழந்தாலும், ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் வெற்றி பெற்று 3-1 என வென்று முன்னிலை வகிக்கின்றது.

முதல் 3 போட்டியின் போது அவ்வளவாக ஜொலிக்காத இம்ரான் தாகிர் ஜோகனஸ்பெர்க் மைதானத்தில் நடந்த 4வது ஒருநாள் போட்டியில் நீக்கப்பட்டார்.
இந்நிலையில், தெ.ஆ வீரர்களுக்கு தண்ணீர் எடுத்து செல்லும் 12வது வீரராக செயல்பட்டார். போட்டியின் நடுவே தாகிர் மைதானத்துக்கு சென்று திரும்பும் போது, அவரை சில இந்திய ரசிகர்கள் இன ரீதியாக தவறாக பேசியதாக தாகிர் புகார் அளித்துள்ளார்.

இம்ரான் தாகிர் ரசிகர்களுடன் ஆக்ரோஷமாக பேசும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்