ஆப்நகரம்

வாலை இழுத்து விளையாடும் இந்திய கிரிக்கெட் அணியின் நூதன விளையாட்டு

தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் அணி வாலைப் பிடித்து இழுக்கும் நூதன பயிற்சியை மேற்கொண்டது.

Samayam Tamil 12 Jan 2018, 5:47 pm
செஞ்சூரியன் : தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் அணி வாலைப் பிடித்து இழுக்கும் நூதன பயிற்சியை மேற்கொண்டது.
Samayam Tamil watch indian cricket teams warm up session in south africas centurion
வாலை இழுத்து விளையாடும் இந்திய கிரிக்கெட் அணியின் நூதன விளையாட்டு

தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைப்பெற்றது. இதில் தென் ஆப்ரிக்கா அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் போட்டியில் தோல்வியடைந்ததால், வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் விளையாட தயாராகும் இந்திய அணி கடுமையாக வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வீரர்கள் சற்று ரிலாக்ஸ் ஆக வித்தியாசமான முறையில், ஒவ்வொரு வரும் தன் பின்னால் ஒரு துணியை வால் போல் கட்டிக்கொள்ள வேண்டும். தன் வாலை மற்ற யாரும் எடுத்து விடாதபடி பாதுகாப்பதோடு, அடுத்தவரின் வாலை எடுக்க வேண்டும் என்ற போட்டி வைக்கபட்டது. #WATCH Indian cricket team's warm-up session in South Africa's Centurion pic.twitter.com/VmFUoRQdqJ — ANI (@ANI) January 11, 2018
இந்த விளையாட்டை இந்திய அணி வீரர்கள் மிக மகிழ்ச்சியுடன் விளையாடி மகிழ்ந்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்