ஆப்நகரம்

தோனியின் வெற்றிகளை கொண்டாடும் தருணமிது: சச்சின் கருத்து

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள தோனியின் முடிவை மதிப்பதாக, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கள் தெரிவித்துள்ளார்.

TNN 5 Jan 2017, 12:27 am
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள தோனியின் முடிவை மதிப்பதாக, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கள் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil we accept dhonis decision tostep down as captain says sachin
தோனியின் வெற்றிகளை கொண்டாடும் தருணமிது: சச்சின் கருத்து


இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி இருந்து வந்தார். இந்நிலையில் அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆனால் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது. தோனியின் முடிவு, அவரது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின், தோனியின் முடிவை மதிப்பதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், தோனியின் தலைமையில் பெற்ற வெற்றிகளை கொண்டாடும் தருணம் இது என்று கூறியுள்ளார். அதிரடி வீரராய் அணியில் நுழைந்து, கேப்டனாக மாறி நிலைத்து நின்று, மூன்று வித உலகக்கோப்பைகளை பெற்றுத் தந்ததை யாரும் மறக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

.@msdhoni #captain pic.twitter.com/8IFLI8geRE— sachin tendulkar (@sachin_rt) January 4, 2017 ஒரு வீரராக களத்தில் சிறப்பாக செயல்பட, தனது வாழ்த்துக்களையும் சச்சின் கூறியுள்ளார்.

We accept Dhoni's decision tostep down as captain says Sachin.

அடுத்த செய்தி

டிரெண்டிங்