ஆப்நகரம்

அமெரிக்காவில் கடைபோட தயாராகும் பி.சி.சி.ஐ., !

அமெரிக்காவில் அதிக கிரிக்கெட் போட்டிகளை நடத்த மிகப்பெரிய திட்டமிட்டு வருவதாக இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

TOI Sports 16 Sep 2016, 4:05 pm
வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிக கிரிக்கெட் போட்டிகளை நடத்த மிகப்பெரிய திட்டமிட்டு வருவதாக இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil we are keen to tap us market says anurag thakur
அமெரிக்காவில் கடைபோட தயாராகும் பி.சி.சி.ஐ., !


புளோரிடாவில் சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ், இந்திய அணிகள் மோதிய 2 டி-20 போட்டிகள் நடந்தது. இப்போட்டிகளை காண பெருமளவில் ரசிகர் கூட்டம் வந்தது. இதையடுத்து அமெரிக்காவில் அதிகளவில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அனுராக் கூறியது:
அமெரிக்காவில் கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் பெருமளவில் உள்ளனர். அதனால் 5-10 ஆண்டுகள் மிகப்பெரிய அளவில் திட்டமிட்டு போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளோம். விரைவில் அதற்காக அமெரிக்காவுக்கு ஒரு குழு அமைக்கப்பட்டு அங்கு சென்று சர்வதேச போட்டிகளுக்கான இடங்களை தேர்வு செய்யும். தற்போதுள்ள சந்தையில் அமெரிக்கா,மற்றும் கனடா இரண்டும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இவ்வாறு அனுராக் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்