ஆப்நகரம்

அப்படித் தாண்டா பேசுவேன்; ஸ்டைலா, கெத்தே, கோபமா! புதுபார்முலாவில் கோஹ்லி!

அணியின் சிறப்பான செயல்பாட்டிற்காக வீரர்களை கடிந்து கொள்வதில் தவறில்லை என்று கோஹ்லி தெரிவித்துள்ளார்.

TNN 13 Jun 2017, 5:32 am
லண்டன்: அணியின் சிறப்பான செயல்பாட்டிற்காக வீரர்களை கடிந்து கொள்வதில் தவறில்லை என்று கோஹ்லி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil we can scold players for team performance says kohli
அப்படித் தாண்டா பேசுவேன்; ஸ்டைலா, கெத்தே, கோபமா! புதுபார்முலாவில் கோஹ்லி!


சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. அதில் இந்திய அணி பாகிஸ்தானிற்கு எதிராக வெற்றி பெற்றது. ஆனால் இலங்கைக்கு எதிராக தோல்வி அடைந்தது. பின்னர் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக வெற்றி பெற்று, அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோஹ்லி, அணி சிறப்பாக செயல்படுவதற்கு சக வீரர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதில் தவறில்லை என்று கூறினார்.

அனைவரும் செய்யும் தவறுகளை வெளிப்படையாக கூற வேண்டும். அதை ஏற்றுக் கொண்டு, தவறை திருத்திக் கொள்ள வேண்டும். நமது வீரர்கள் நெருக்கடியான நேரத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்று அனுபவம் பெற்று வைத்திருக்கிறார்கள். எனவே சரியாக அவர்களை ஊக்கப்படுத்தினால் நிச்சயம் வெற்றிக் கனியை சுவைக்கலாம்.

We can scold players for team performance says Kohli .

அடுத்த செய்தி

டிரெண்டிங்