ரஹானே கடந்த 11 டெஸ்ட்களில் 19 என்ற சராசரியை மட்டுமே வைத்துள்ளார். கடைசியாக கான்பூர் டெஸ்டில்கூட இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 39 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். தற்போது அவரது இடத்திற்கு வந்துள்ள ஷ்ரேயஸ் ஐயர் முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம், அரை சதம் அடித்து தனது பார்மை வெளிப்படுத்திவிட்டார். இதனால், இனி ரஹானேவுக்குப் பதிலாக ஷ்ரேயஸ் ஐயர்தான் தொடர்ந்து களமிறக்குவார் எனக் கருதப்பட்டது.
இந்நிலையில், அடுத்து மும்பையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டின்போது ரஹானேவுக்கு காயம், அதனால் ஷ்ரேயஸ் ஐயர் களமிறங்குவார் என விராட் கோலி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, இனி ரஹானேவுக்கு வாய்ப்பு கிடைக்காது. ஷ்ரேயஸ் ஐயர் அவரது இடத்தை பிடித்துவிட்டார் என மீண்டும் பேச்சுக்கள் எழுந்தது.
இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியைப் பெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றிய பிறகு கேப்டன் விராட் கோலி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார். அப்போது, இனி அஜிங்கிய ரஹானேவுக்கு இடம் கிடைக்குமா? என ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார்.
கோலி பேட்டி:
அப்போது பேசிய கோலி, “ரஹானேவின் தற்போதைய பார்மில் என்னால் தலையிட முடியாது. நான் மட்டுமல்ல யாரும் அதில் தலையிட கூடாது. ரஹானேவ தனது தவறுகளை விரைவில் சரிசெய்துகொள்ள வேண்டும் என்பதே எனது கருத்து. பல போட்டிகளில் மேட்ச் வின்னராக இருந்தவருக்கு ஆதரவாக இருப்பதே எங்களது கடமை. ஒருசில போட்டிகளில் சொதப்பிவிட்டாலும் மக்கள் அவர்களை விமர்சிக்க துவங்கிவிடுகின்றனர்” எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர், “அடுத்தது என்ன…? அவருக்குப் பதில் யார் என கேள்வி எழுப்பும் சிலர் அறிவுரையும் வழங்குகிறார்கள். அதற்காக எல்லாம், அணியில் மாற்றங்களை கொண்டுவர முடியாது. சிலர் ஒரு வீரரை பரிந்துரைக்கிறார்கள். அந்த வீரரை இரண்டே மாதத்திற்குள் விமர்சித்து, வேறு ஒருவரை சேர்க்க வேண்டும் என்கிறார்கள். இதனை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்வது?” என காட்டமாக பேசினார்.
இந்நிலையில், அடுத்து மும்பையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டின்போது ரஹானேவுக்கு காயம், அதனால் ஷ்ரேயஸ் ஐயர் களமிறங்குவார் என விராட் கோலி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, இனி ரஹானேவுக்கு வாய்ப்பு கிடைக்காது. ஷ்ரேயஸ் ஐயர் அவரது இடத்தை பிடித்துவிட்டார் என மீண்டும் பேச்சுக்கள் எழுந்தது.
இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியைப் பெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றிய பிறகு கேப்டன் விராட் கோலி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார். அப்போது, இனி அஜிங்கிய ரஹானேவுக்கு இடம் கிடைக்குமா? என ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார்.
கோலி பேட்டி:
அப்போது பேசிய கோலி, “ரஹானேவின் தற்போதைய பார்மில் என்னால் தலையிட முடியாது. நான் மட்டுமல்ல யாரும் அதில் தலையிட கூடாது. ரஹானேவ தனது தவறுகளை விரைவில் சரிசெய்துகொள்ள வேண்டும் என்பதே எனது கருத்து. பல போட்டிகளில் மேட்ச் வின்னராக இருந்தவருக்கு ஆதரவாக இருப்பதே எங்களது கடமை. ஒருசில போட்டிகளில் சொதப்பிவிட்டாலும் மக்கள் அவர்களை விமர்சிக்க துவங்கிவிடுகின்றனர்” எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர், “அடுத்தது என்ன…? அவருக்குப் பதில் யார் என கேள்வி எழுப்பும் சிலர் அறிவுரையும் வழங்குகிறார்கள். அதற்காக எல்லாம், அணியில் மாற்றங்களை கொண்டுவர முடியாது. சிலர் ஒரு வீரரை பரிந்துரைக்கிறார்கள். அந்த வீரரை இரண்டே மாதத்திற்குள் விமர்சித்து, வேறு ஒருவரை சேர்க்க வேண்டும் என்கிறார்கள். இதனை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்வது?” என காட்டமாக பேசினார்.