ஆப்நகரம்

ஜடேஜா ரன் அவுட் சர்ச்சை... நடுமைதானத்துக்குள் நாயை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர்: சென்னை போட்டியில் ஒரே கூத்து தான்!

சென்னை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ், பந்த் அரைசதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்தது. இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் போலார்டு முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

Samayam Tamil 15 Dec 2019, 6:10 pm
சென்னை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ், பந்த் அரைசதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்தது. இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் போலார்டு முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.
Samayam Tamil west indies need 289 runs to win against india in 1st odi at chennai
ஜடேஜா ரன் அவுட் சர்ச்சை... நடுமைதானத்துக்குள் நாயை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர்: சென்னை போட்டியில் ஒரே கூத்து தான்!


சொதப்பல் துவக்கம்

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர் ராகுல் (6) சொதப்பலாக வெளியேறினார். தொடர்ந்து வந்த கேப்டன் கோலி (4) காட்ரல் வேகத்தில் போல்டானார். ரோஹித் ஷர்மா (36) ஓரளவு கைகொடுத்தார்.

சூப்பர் ஜோடி

பின் இணைந்த ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை இந்த ஜோடி எளிதாக சமாளித்தது. சீரான இடைவேளையில் இருவரும் பவுண்டரிகளும் சிக்சர்களுமாக விளாசினர். நான்காவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 114 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் (70) வெளியேறினார்.

​பந்த் அதிரடி

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் ரிஷப் பந்த் தனது அதிரடியை தொடர்ந்தார். பந்த் 71 ரன்கள் எடுத்த போது போலார்டு வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். கடைசி நேரத்தில் பின் வரிசை வீரர்கள் ஓரளவு கைகொடுக்க, இந்திய அணி, 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு 289 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Twitter-DND #INDvWI https://t.co/3JADfscGyd

​குறுக்கிட்ட நாய்

இப்போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்த போது போட்டியின் 26வது ஓவரின் இடையில் மைதானத்துக்குள் நாய் புகுந்ததால் போட்டி தடைபட்டது. மைதான பணியாளர்களுக்கு ஆட்டம்காட்டிய அந்த நாய் மைதானத்தையே சுற்றி வர, அதை விரட்ட முடியாமல் பணியாளர்கள் தவித்தனர். பின் வெஸ்ட் இண்டீஸ் வீரர் விரட்ட அந்த நாய் வெளியே ஓடியது. அதற்குபின் போட்டி நடந்தது.

Twitter-Turning point of the #INDvWI match. https://t.co/l...

​மிரட்டிய காட்ரல்​

இந்திய அணிக்கு எதிராக துவக்க ஓவர்களை வீசிய வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் காட்ரல் தனது முதல் 16 பந்தில் 1 ரன் கூட வழங்கவில்லை. அதன் பின் காட்ரல் பந்தில் 2 ரன்கள், ஒரு பவுண்டரி அடித்து தடுமாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். காட்ரல் இப்போட்டியில் மொத்தமாக 10 ஓவர்கள் வீசி 3 மெய்டின் உட்பட 46 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார்.

Twitter-ODI debutant Shivam Dube makes his way to the crea...

228ஆவது வீரர்

இப்போட்டியில் இந்திய அணிக்காக களமிறங்கிய ஆல் ரவுண்டர் சிவம் துபே, இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமான 228ஆவது வீரரானார். இவருக்கு இந்திய துணைக்கேப்டன் ரோஹித் ஷர்மா தொப்பியை வழங்கினார்.

15 ஆண்டுக்கு பின்

இப்போட்டியில் நான்காவது விக்கெட்டுக்கு இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் ஜோடி 114 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் நான்காவது விக்கெட்டுக்கு தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக 100 ரன்களுக்கு மேல் சேர்த்து அசத்தினர். முன்னதாக இதே போல நான்காவது விக்கெட்டுக்கு தொடர்ச்சியாக மூன்றாவது முறைக்கு மேல் 100 ரன்களுக்கு மேல் கடந்த 2004ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் லட்சுமன், யுவராஜ்சிங், திராவிட் ஆகியோர் இம்மைல்கல்லை எட்டினர்.

​ஜடேஜா அவுட் சர்ச்சை

இப்போட்டியில் போட்டியில் 48ஆவது ஓவரின் 4ஆவது பந்தை எதிர் கொண்ட இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா 1 ரன் எடுக்க ஓடினார். அப்போது வெஸ்ட் இண்டீஸ் பீல்டர் ராஸ்டன் சேஸ் கச்சிதமாக ஸ்டெம்ப்பை பதம் பார்த்தார். ஆனால் அம்பயர் டிவி அம்பயரிடம் சரிபார்க்கவில்லை. ஆனால் அது ரன் அவுட் என மெகா திரையின் ரீப்ளேவில் தெரிந்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் போலார்டு முறையிட, பின் மீண்டும் டிவி அம்பயரிடம் கேட்கப்பட்டு ரவிந்திர ஜடேஜா வெளியேறினார். இதனால் கொஞ்ச நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்