ஆப்நகரம்

யார் கேட்டாலும் சொல்லமாட்டேன்: அடம் பிடிக்கும் கோலி

அறைக்குள் நடக்கும் விஷயங்களை வெளியே சொல்லவே மாட்டேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

TNN 23 Jun 2017, 1:36 am
அறைக்குள் நடக்கும் விஷயங்களை வெளியே சொல்லவே மாட்டேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil what happens in change room is private says virat kohli
யார் கேட்டாலும் சொல்லமாட்டேன்: அடம் பிடிக்கும் கோலி


இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த அணில் கும்ப்ளே சில தினங்களுக்கு முன்பாக பதவி விலகினார். கேப்டன் விராட் கோலிக்கு தன் பயிற்சி அணுகுமுறையில் முரண்பாடுகள் இருப்பதாகத் தெரிந்த பிறகு பதவியில் தொடர்வது சரியல்ல என்றும் தனது பயிற்சியாளர் ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

கும்பளேயின் இந்த முடிவு கோலி – கும்ப்ளே இடையே இருந்த பனிப்போரை தெளிவுபடுத்தியது. இது தொடர்பாக வியாழக்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கேப்டன் விராட் கோலி, கும்ப்ளே எடுத்திருக்கும் முடிவை மதிக்கிறோம் என்றும் அவர் இந்திய அணிக்கு ஆற்றியிருக்கும் பங்கு யாரும் மாற்றுக்கருத்து கூறமுடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

கும்ப்ளே உடன் அப்படி என்ன கருத்து வேறுபாடு உள்ளது? இருவருக்கும் இடையே என்ன நடந்தது? என்பன உள்ளிட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “அணியினர் தங்கும் அறைக்குள் என்ன நடக்கிறது என்பதை நான் வெளியே பொது இடத்தில் பேசமாட்டேன். சாம்பியன்ஸ் கோப்பை தொடரின்போது 11 முறை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்திருக்கிறேன். அப்போதெல்லாம் அறைக்குள் நடந்த அணியின் அந்தரங்கமான விஷயங்களை வெளியிட்டத்தில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே இதை ஒரு வழக்கமாக்கியுள்ளோம்.” என்று கூறியுள்ளார்.

கோலி – கும்ப்ளே மோதலுக்கான காரணத்தை அறிய கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும் விராட் கோலி இதே போலவே பதில் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்