ஆப்நகரம்

அபாயகரமான பிட்ச் என்றால் என்ன? - இந்திய வெற்றிக்கு இதுதான் காரணமா?

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஜோகனஸ்பெர்க் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று ஆறுதலை தேடியுள்ளது.

Samayam Tamil 30 Jan 2018, 1:55 am
ஜோகனஸ்பெர்க் : தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஜோகனஸ்பெர்க் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று ஆறுதலை தேடியுள்ளது.
Samayam Tamil when does a cricket pitch become dangerous
அபாயகரமான பிட்ச் என்றால் என்ன? - இந்திய வெற்றிக்கு இதுதான் காரணமா?


தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாட சென்றுள்ளது. டெஸ்ட் தொடரின் முடிவில் தென் ஆப்ரிக்கா 2-1 என தொடரை வென்றது

ஆபத்தான பிட்ச் :
ஜோகனஸ்பெர்க்கில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பந்து கணிக்கமுடியாத அளவுக்கு திடீர் பவுண்சர் ஆனதால் வீரர்கள் பல முறை பந்தில் அடிபட்டு காயமடைந்தனர். இதனால் பல முறை போட்டி நடுவர்கள் கூடி பேசி பிட்ச் ஆபத்தாக உள்ளதா என ஆராய்ந்து கேப்டன்களிடம் பேசினர்.

மேலும் படிக்க : அடிவாங்காத பேட்ஸ்மேன்களே இல்லை -ஆளை பதம்பார்க்கும் ஜோகனஸ்பெர்க் பிட்ச்

இந்திய அணி வெற்றிக்கான காரணம் :
பல முறை ஆபத்தான முறையில் பந்து பவுண்சர் ஆன போதும், இந்திய அணி சார்பாக பிட்ச் சரியில்லை, போட்டியை ரத்து செய்ய வேண்டும் என கேட்கப்படவில்லை. இரு அணி கேப்டன்களும் பிட்ச் சரியில்லை போட்டியை நிறுத்த வேண்டும் என கூறினால் தான் நடுவர்கள் போட்டியை ரத்து செய்ய வாய்ப்புள்ளது.



மேலும் படிக்க : முன்னாடியே டெஸ்ட் போட்டியை நிறுத்தியிருக்க வேண்டும் - தோல்விக்கு பின் புலம்பும் டீன் எல்கர்

ஆனால் அப்படிப்பட்ட கோலி கேட்டுகொள்ளாததால், ஆபத்தையும் பொருட்படுத்தாது வெற்றி பெற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் விளையாடி கடைசியில் வெற்றியும் பெற்று அசத்தியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்