ஆப்நகரம்

சுரேஷ் ரெய்னா செய்த உதவியால் என் மனைவி உயிர் பிழைத்தார் - இங்கிலாந்து பேருந்து ஓட்டுநர்

இந்திய கிரிகெட் வீரர் சுரேஷ் ரெய்னா செய்த உதவியால் என் மனைவி உயிர் காப்பாற்றப்பட்டது. அவரின் உதவியை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மட்டேன்.

Samayam Tamil 23 Jul 2018, 3:59 pm
லண்டன் : இந்திய கிரிகெட் வீரர் சுரேஷ் ரெய்னா செய்த உதவியால் என் மனைவி உயிர் காப்பாற்றப்பட்டது. அவரின் உதவியை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மட்டேன்.
Samayam Tamil suresh Raina


இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் செல்லும் பேருந்துக்கு இங்கிலாந்தை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஜெஃப் குட்வின் கடந்த 1999ம் ஆண்டு முதல் ஓட்டுனராக உள்ளார்.

இவர் கூறும் போது :
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள். இவர்களின் நடத்தை, பழகும் விதம் மிகவும் நல்ல விதத்தில் இருக்கும். என்னிடம் கூட மிகவும் நண்பர்களைப் போல பலகுவார்கள்.

இந்திய அணியில் உள்ள சுரேஷ் ரெய்னா செய்த உதவியினால் தான் என் மனைவி இன்று உயிருடன் உள்ளார். என் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்ட போது பணம் இல்லாமல் தவித்தேன். அப்போது ரெய்னா தன் ஜெஸ்ஸியை ஏலத்தில் விட்டு அதில் கிடைத்த பணத்தை எனக்கு கொடுத்தார். அதன் மூலம் என் மனைவியை காப்பாற்ற முடிந்தது. அந்த உதவிக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி உள்ளவனாக இருப்பேன். என்றார்.



இந்திய சுழல் வீரர் சஹால் என்னை ஓல்டு மேன் என செல்லமாக அழைப்பார், தோனி தான் உலகின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என இந்திய அணியினர் மீது பாச மழை பொழிந்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்