இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்டார் வீரர் ரிஷப் பந்த், இன்று அதிகாலை கோர விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிர் பிழைத்ததே அதிசயம் எனக் கருதப்படுகிறது. இந்நிலையில் தற்போது, அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இருப்பினும், ரிஷப் பந்த் முழுவதுமாக குணமடைய 6 மாதங்களுக்கு மேல் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் இந்திய டெஸ்ட் அணியின் மிகமுக்கிய வீரராக இருக்கிறார். இவரது தயவில்தான் இந்திய டெஸ்ட் அணி பலமுறை வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில், இவர் இல்லாததால் ஜனவரி இறுதியில் துவங்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மாற்று வீரரை களமிறக்க வேண்டிய கஷ்டமான முடிவினை பிசிசிஐ எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இவருக்கு மாற்றாக 4 பேர் அணியில் இருக்கிறார்கள். இருப்பினும், இவரைப் போல அதிரடி காட்டக் கூடியவர்களாக இவர்கள் இல்லை என்பதுதான் உண்மை. அந்த 4 பேர் குறித்து தற்போது பார்க்கலாம்.
கே.எல்.ராகுல்:
கே.எல்.ராகுல் கிட்டதட்ட அணியிலிருந்து ஓரங்கட்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். காரணம், அவர் சமீப காலமாக சிறப்பாக செயல்படவில்லை. இந்நிலையில், ரிஷப் பந்த் இல்லாததால் கே.எல்.ராகுலுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படும் எனத் தெரிகிறது.
சஞ்சு சாம்சன்:
சஞ்சு சாம்சன் மூன்று வருடங்களுக்கு பிறகு, ரஞ்சிக் கோப்பை அணியில் இடம்பெற்று சிறப்பாக விளையாடி வருகிறார். கிட்டதட்ட ரிஷப் பந்தை போல ஆக்ரோஷமாக விளையாடித்தான், ரன்களை குவித்து வருகிறார். நல்ல பார்மில் இருக்கிறார். இதனால், இவரும் ரிஷப் பந்திற்கு மாற்றாக செயல்பட வாய்ப்புகள் இருக்கிறது.
கே.எஸ்.பரத்:
விக்கெட் கீப்பர் பேட்டர் கே.எஸ்.பரத் சமீப காலமாகவே டெஸ்ட் அணியில் இடம்பிடித்து வருகிறார். இருப்பினும், ரிஷப் பந்த் சிறப்பாக செயல்பட்டு வந்ததால் இவருக்கு லெவன் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது ரிஷப் பந்த் இல்லாததால், மாற்றாக இவர் களமிறங்க வாய்ப்புகள் இருக்கிறது.
இஷான் கிஷன்:
இளம் விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷன் தற்போது முரட்டு பார்மில் இருக்கிறார். இருப்பினும், இவரை மிடில் வரிசையில் களமிறக்குவது சரியாக வராது. இருப்பினும், கிஷன் முரட்டு பார்மில் இருப்பதால், ஒருமுறை மிடில் வரிசையில் வாய்ப்பு கொடுத்து, அவரது திறமையை சோதித்து பார்க்க பிசிசிஐ விரும்பும் எனக் கருதப்படுகிறது.
இருப்பினும், ரிஷப் பந்த் முழுவதுமாக குணமடைய 6 மாதங்களுக்கு மேல் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் இந்திய டெஸ்ட் அணியின் மிகமுக்கிய வீரராக இருக்கிறார். இவரது தயவில்தான் இந்திய டெஸ்ட் அணி பலமுறை வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில், இவர் இல்லாததால் ஜனவரி இறுதியில் துவங்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மாற்று வீரரை களமிறக்க வேண்டிய கஷ்டமான முடிவினை பிசிசிஐ எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இவருக்கு மாற்றாக 4 பேர் அணியில் இருக்கிறார்கள். இருப்பினும், இவரைப் போல அதிரடி காட்டக் கூடியவர்களாக இவர்கள் இல்லை என்பதுதான் உண்மை. அந்த 4 பேர் குறித்து தற்போது பார்க்கலாம்.
கே.எல்.ராகுல்:
கே.எல்.ராகுல் கிட்டதட்ட அணியிலிருந்து ஓரங்கட்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். காரணம், அவர் சமீப காலமாக சிறப்பாக செயல்படவில்லை. இந்நிலையில், ரிஷப் பந்த் இல்லாததால் கே.எல்.ராகுலுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படும் எனத் தெரிகிறது.
சஞ்சு சாம்சன்:
சஞ்சு சாம்சன் மூன்று வருடங்களுக்கு பிறகு, ரஞ்சிக் கோப்பை அணியில் இடம்பெற்று சிறப்பாக விளையாடி வருகிறார். கிட்டதட்ட ரிஷப் பந்தை போல ஆக்ரோஷமாக விளையாடித்தான், ரன்களை குவித்து வருகிறார். நல்ல பார்மில் இருக்கிறார். இதனால், இவரும் ரிஷப் பந்திற்கு மாற்றாக செயல்பட வாய்ப்புகள் இருக்கிறது.
கே.எஸ்.பரத்:
விக்கெட் கீப்பர் பேட்டர் கே.எஸ்.பரத் சமீப காலமாகவே டெஸ்ட் அணியில் இடம்பிடித்து வருகிறார். இருப்பினும், ரிஷப் பந்த் சிறப்பாக செயல்பட்டு வந்ததால் இவருக்கு லெவன் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது ரிஷப் பந்த் இல்லாததால், மாற்றாக இவர் களமிறங்க வாய்ப்புகள் இருக்கிறது.
இஷான் கிஷன்:
இளம் விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷன் தற்போது முரட்டு பார்மில் இருக்கிறார். இருப்பினும், இவரை மிடில் வரிசையில் களமிறக்குவது சரியாக வராது. இருப்பினும், கிஷன் முரட்டு பார்மில் இருப்பதால், ஒருமுறை மிடில் வரிசையில் வாய்ப்பு கொடுத்து, அவரது திறமையை சோதித்து பார்க்க பிசிசிஐ விரும்பும் எனக் கருதப்படுகிறது.