ஆப்நகரம்

‘டி20 உலகக் கோப்பை’…நடராஜனை புறக்கணிக்க காரணம் என்ன? இந்த ஒரு விஷயம்தான் தடையா இருக்கு!

டி20 உலகக் கோப்பை தொடரில் நடராஜனை சேர்க்காததற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.

Samayam Tamil 6 Oct 2022, 11:17 am
இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடருக்கு தீவிரமாக தயாராகி வருகிறது.
Samayam Tamil டி நடராஜன்


இம்மாதம் 23ஆம் தேதிமுதல் துவங்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய அணி தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 தொடரில் பங்கேற்க முடிவு செய்தது.

குறை கண்டுபிடிப்பு:

இந்த இரண்டு சுற்றுப் பயணங்கள் மூலம் இந்திய அணியின் மிகப்பெரிய குறை வெளிப்பட்டுள்ளது. ஆம், ஆஸ்திரேலிய டி20 தொடரின்போது இந்திய அணி 208 ரன்ளை குவித்தபோதும் பௌலர்களின் சொதப்பல் காரணமாக இந்தியா படுதோல்வியை சந்தித்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது தென்னாப்பிரிக்க தொடரின் இரண்டாவது போட்டியிலும் இந்தியா 236 ரன்கள் குவித்தும், பௌலர்களின் சொதப்பல் காரணமாக வெறும் 16 ரன்கள் வித்தியாசத்தில்தான் வெற்றிபெற முடிந்தது. இப்படி இரண்டு தொடர்களிலும் இந்தியா சேஸிங்கின்போது சொதப்புவதற்கு காரணம் டெத் பௌலிங்தான்.

மெய்ண் பௌலர்கள் சொதப்பல்:

பும்ரா காயம் காரணமாக ரெஸ்டில் இருந்ததால், இந்தியா டெத் ஓவர்களில் சொதப்பி வருகிறது. டெத் ஓவர்களின் ஸ்பெஷலிஸ்ட்கள் அர்ஷ்தீப் சிங், தீபக் சஹார் ஆகியோரும் டெத் ஓவர்களல் படுமோசமாக சொதப்பி வருகிறார்கள் இதனால், டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா சேஸிங்கின்போது தோல்விகளை சந்திக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என விமர்சகர்கள் அச்சம் தெரிவித்து வந்தனர்.

பும்ரா விலகல்:

இந்நிலையில் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளதாக பிசிசிஜ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

மாற்று வீரர்:

இதனைத் தொடர்ந்து பும்ராவுக்கான மாற்று வீரர் யார் என்பது குறித்து பிசிசிஐ தீவிரமாக பரிசீலித்து வருகிறது. அந்த பரிசீலனையில், சமீபத்தில் ஆஸ்திரேலிய பிட்ச்களில் சிறப்பாக செயல்பட்டவர்கள், அனுபவ வீரர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடைசியாக ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்ட டி நடராஜன், முகமது சிராஜ் ஆகியோரது பெயர்களையும், முகமது ஷமியின் பெயரையும் பரிசீலனைக்கு பிசிசிஐ எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடராஜனுக்கு வாய்ப்பு குறைவு:

இந்நிலையில் டி நடராஜனின் பெயரை தேர்வு செய்ய வாய்ப்பு குறைவு எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம், அவருக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதுதான். இதன் காரணமாக அவர் கடந்த ஐபிஎல் 15ஆவது சீசனில் பங்கேற்கவில்லை. மேலும், காயம் காரணமாக சிலமுறை இந்திய அணியிலிருந்தும் விலகினார். இதனால் இவரை டி20 உலகக் கோப்பைக்கு சேர்த்து, அப்போது நடராஜனுக்கு காயம் ஏற்பட்டால் அது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படும். இதனால்தான், திறமை இருந்தும் நடராஜன் ஓரங்கட்டப்படுவதாகக் கருதப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்