ஆப்நகரம்

முடிவுக்கு வருகிறதா யுவராஜ், ரெய்னா கிரிக்கெட் வாழ்க்கை: சப்பை காரணம் சொன்ன பிசிசிஐ!

தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணியில் ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோரை தேர்வு செய்யாததற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

TOI Sports 24 Dec 2017, 9:28 pm
மும்பை: தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணியில் ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோரை தேர்வு செய்யாததற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.
Samayam Tamil why yuvraj singh and suresh raina was not included in limited overs series against south africa
முடிவுக்கு வருகிறதா யுவராஜ், ரெய்னா கிரிக்கெட் வாழ்க்கை: சப்பை காரணம் சொன்ன பிசிசிஐ!


தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணி, 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் பங்கேற்கும் இளம் கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதில் வழக்கம் போல இந்திய அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளர்களான அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, ரெய்னா, யுவராஜ் உள்ளிட்டோர் புறக்கணிக்கப்பட்டனர். இதற்கு பிசிசிஐ., தேர்வுக்குழு தலைவர் பிரசாத் சொதப்பலான காரணம் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து பிரசாத் கூறுகையில்,’ யுவராஜ் சிங் விஷயத்தில் உடற்தகுதியில் பிரச்சனை உள்ளது. அவர் உடற்தகுதி தேர்வில் பாஸ் ஆகியுள்ளார் என கேள்விப்பட்டேன், ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்று வெகு நாட்கள் ஆகிவிட்டது. அணிக்கு தேவையான போது யுவராஜ் பெயர் பரிந்துரை செய்யப்படும். அதே போல ரெய்னாவின் உள்ளூர் தொடர் அவ்வளவாக திருப்தி அளிக்கும் விதத்தில் அமையவில்லை.’ என்றார்.

இந்திய அணியில் தற்போது மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ், மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் என வலுவாக இருப்பதால், இனி ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோர் இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைப்பது நடக்காத செயலாக மாறிவருகிறது.

India selectors headed by MSK Prasad picked a 17 member squad for upcoming South Africa yesterday which saw the return of Shardul Thakur and Kedar Jadhav; however young Siddharth Kaul and Washington Sundar was left out. Virat Kohli also returned to the squad after taking a break from Sri Lanka’s limited over series due to personal reasons.

அடுத்த செய்தி

டிரெண்டிங்